மேலும் அறிய

”அது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை..எங்களுடையது இல்லை!” – ஷாக் கொடுக்கும் பா.ஜ.க.,

குடியுரிமைச் சட்டத்திருத்தத் மசோதாவை நிறைவேற்றுவது குறித்தான வாக்கெடுப்பில் அ.தி.மு.க.,வின் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த நிலையில் அந்தக் கட்சியின் ஓ.பி.ரவீந்திரநாத் அதற்கு ஆதரவாக வாக்களித்தது இங்கே குறிப்பிடத்தக்கது

EPS-OPS
Caption

 

ஏப்ரலில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது ஆளும் அ.தி.மு.க. அரசு.  இலவச வாஷிங்மெஷின், மாணவர்களுக்கான 2 ஜிபி டேட்டா, இலவச கேபிள் இணைப்பு, எரிபொருள் விலைக்குறைப்பு என இலவசங்கள் அறிக்கையில் ஒருபக்கம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மற்றொருபக்கம் கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட நிரந்தர அறிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு ஹைலைட்டாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் எனத் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது அ.தி.மு.க., 

”அது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை..எங்களுடையது இல்லை!” – ஷாக் கொடுக்கும் பா.ஜ.க.,
Caption

ஆனால் அ.தி.மு.க.,வின் இந்த அறிவிப்புகள் குறித்துத் தங்களிடம் கலந்தாலோசிக்கவே இல்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறது தமிழக பாரதிய ஜனதா. இது குறித்துப் பேசியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி ”இந்தச் சட்டத்தின் வழியாக நாங்கள் ஐம்பது அறுபது ஆண்டுக்காலமாக குடியுரிமை இல்லாமல் வாழ்ந்த மக்களுக்காகக் குடியுரிமை அளித்திருக்கிறோம். மற்றபடி நாங்கள் எந்த மக்களின் வாழ்வுரிமையையும் பறிக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை. எங்களது மத்திய ஆட்சியில்தான் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அவர்களில் பலர் தற்போது தாயகம் திரும்பி அங்கே அரசியலில் பல உயர்பதவிகளை வகிக்கிறார்கள். அதனால் குடியுரிமைச் சட்டதிருத்தம் மக்கள்நலனுக்கு எதிரானது என்பதே தவறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்திருத்தம் திரும்பப்பெறுதல் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “எங்கள் அரசு எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவானது. அதனால் மத்திய அரசிடம் சி.ஏ.ஏ., திரும்பப் பெறுவது குறித்து வலியுறுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் குடியுரிமைச் சட்டத்திருத்தத் மசோதாவை நிறைவேற்றுவது குறித்தான வாக்கெடுப்பில் அ.தி.மு.க.,வின் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த நிலையில் அந்தக் கட்சியின் ஓ.பி.ரவீந்திரநாத் அதற்கு ஆதரவாக வாக்களித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget