மேலும் அறிய

திருவாரூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்

குடியிருக்கும் வீட்டில் இருந்து 15 அடி தூரத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க வேண்டும் என அரசாணை உள்ள நிலையில் அதனை மீறி 6 அடி தூரத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க முற்படுவதாக புகார்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் திருவிக நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஒன்றைரை ஆண்டுகளாக  வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டபோது இந்த மின் கோபுரத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறி விக்னேஷ் மின்வாரிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திருவாரூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இது குறித்து விக்னேஷ் கூறுகையில், குடியிருக்கும் வீட்டில் இருந்து 15 அடி தூரத்தில் தான் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க வேண்டும் என்று அரசாணை இருப்பதாகவும்,அதனை மீறி அதிகாரிகள் வீட்டில் இருந்து 6 அடி. தூரத்தில் மின் கோபுரம் அமைக்க முற்படுவதாகவும், அது குறித்து நான் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எங்களது செப்டிக் டேங்கையும், கழிவறையையும் இடித்துவிட்டு அந்த இடத்தில் டவர் கட்ட அதிகாரிகள் முனைவதாகவும், மேலும் இந்த மின் கோபுரத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.

திருவாரூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, இது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திட்டமிட்ட பணி என்றும்,மாவட்டம் முழுவதும் 56 உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க உள்ளதாகவும், 54 கோபுரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 2 உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு மட்டும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் தான் இந்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன எனவும் கூறினர். மேலும் இப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் வருவாய் துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள், நில அளவையர்கள், காவல்துறை அதிகாரிகள், திருவாரூர் மின் வாரிய செயற்பொறியாளர், மின்வாரிய அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என பலர் அங்கு வந்திருந்து வீட்டு உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget