மேலும் அறிய

World Meditation Day: உலக தியான தினம்… தியானம் செய்யத் தெரியவில்லையா? இவ்வளவுதான் விஷயம்… இதோ சிம்பிள் டிப்ஸ்!

ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று உலக தியான தினம் கொண்டாடப்படுகிறது. தியானம் செய்வதற்கான எளிய குறிப்புகளை யோகா குரு அக்ஷர் மக்களுக்கு வழங்கியுள்ளார்.

தியானம் நம் மனம் மற்றும் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அதனை சரியான வழிகளில் செய்யவேண்டும் என்பதுதான் ஒரே சிக்கல். அதனை பலர் அறிவதில்லை. இதற்காக பிரத்யேக வகுப்புகள் சென்று பயிற்சி எடுக்க நேரமும் வசதியும் இல்லாதவர்கள் யோகா குருவாக இருப்பவர்கள் கூறுவதை கேட்டு கற்றுக்கொள்ளலாம். அவர்கள் கூறும் எளிய வழிமுறைகளை இங்கே தொகுத்துள்ளோம். 

தியானத்தின் முக்கியத்துவம்

மனம் அலைந்து திரியும் தன்மை கொண்டது. எண்ணங்கள் வருவதும் போவதும் இயற்கையானது. இந்த எண்ணங்களின் ஓட்டத்தை கையாளுவதற்கு ஆரம்பத்திலிருந்தே மனம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எண்ணங்கள் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்து, கடுமையாக தாக்கும்போது, அவற்றைக் கையாள்வதற்கு மனது சிரமப்படுகிறது. இது தொடரும் போது ஒருவர் மனரீதியாக சோர்வடையலாம். தியானம் மனதை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் எந்த புயலையும் தாங்கும் வகையில் அதனை தயார்படுத்துகிறது. அமைதியான மனநிலையுடன், ஒருவர் கையில் உள்ள எந்த சவாலையும் சமாளித்து அமைதியை அனுபவிக்க முடியும். இந்த பழமையான நடைமுறை மற்றும் அதனால் ஏற்படும் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று உலக தியான தினம் கொண்டாடப்படுகிறது. தியானம் செய்வதற்கான எளிய குறிப்புகளை யோகா குரு அக்ஷர் பகிர்ந்து கொள்கிறார்.

World Meditation Day: உலக தியான தினம்… தியானம் செய்யத் தெரியவில்லையா? இவ்வளவுதான் விஷயம்… இதோ சிம்பிள் டிப்ஸ்!

தியானத்தை எளிமையாக்கும் நுட்பங்கள்:

தியானத்தை எளிமையாக்குவதற்கான சில நுட்பங்கள் இவை. உங்கள் பயிற்சியில் நீங்கள் முன்னேறும்போது, பிரகத் ஜோதி தியான், த்ரதக் தியான் மற்றும் பல நுட்பங்களைப் பயிற்சி செய்யத் தொடங்கலாம்.

  1. முழுமையாக புரிந்து கொள்ளுங்கள்

தியான செயல்முறை அனைத்தையும் முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். அமரும் தோரணை, சுவாசம் மற்றும் தியானத்தின் பிற கூறுகளை என எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.

  1. முன்னுரிமை கொடுங்கள்

தியானத்தை திசைதிருப்பவோ அல்லது நேரத்தை நிரப்பவோ பயன்படுத்தக்கூடாது. இது ஒரு எளிய நடைமுறையாக மாற, அதற்குத் தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

  1. அர்ப்பணிப்புடன் பயிற்சி செய்யுங்கள்

தியானத்தை தவறாமல் பயிற்சி செய்வதற்கு முழு அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான பக்தி தேவை. இந்த நிலைத்தன்மையுடன் மட்டுமே நீங்கள் அதை சிரமமின்றி செய்ய உதவும்.

  1. தியானத்தின் கலையைக் கண்டறியவும்

எல்லாவற்றையும் போலவே, தியானத்திலும் தேர்ச்சி பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட உத்தியும் திறமையும் தேவை. தியானத்தைக் கற்றுக்கொள்வதற்கும் அதை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும், சரியான பயிற்சி செய்யவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்: Raasa kannu : வலி நிறைந்த வரிகளும் மனதை கனக்க செய்யும் குரலும்..வெளியானது மாமன்னனின் ராசா கண்ணு பாடல்!

தியானம் செய்ய எளிய பயிற்சிகள்:

  1. ஸ்வாச தியானம் - மூச்சு பயிற்சி

வசதியான முறையில் அமரவும் - சுகாசனம், அர்த்த பத்மாசனம் அல்லது பத்மாசனம் முறையை பின்பற்றலாம். பிராப்தி முத்ராவில் உங்கள் உள்ளங்கைகளை முழங்கால்களில் வைக்கவும். உங்கள் முதுகை நேராக்கி, கண்களை மூட வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளிவிடும்போதும் உங்கள் மூச்சை உள்ளே நுழைவதிலும், பின்னர் உங்கள் நாசியை விட்டு வெளியேறுவதிலும் கவனம் செலுத்துங்கள்.

  1. ஸ்திதி தியானம் - நிலையான தியானம்

சுகாசனம் போன்ற வசதியான முறையில் அமரவும். தலையை திருப்பி 5 வினாடிகள் முன்னோக்கிப் பார்க்கவும், மேலும் ஐந்து வினாடிகள் உங்களுக்குப் பின்னால் பார்க்கவேண்டும். பின்னர் வலது மற்றும் இடது பக்கங்களில் தலா ஐந்து வினாடிகள் பார்க்கவேண்டும். இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு முடிந்தவரை நீங்கள் பார்த்த விஷயங்களை நினைவுபடுத்துங்கள்.

  1. ஆரம்ப் தியான்- தொடக்க தியானம்

எந்த வசதியான உட்காரும் தோரணையையும் தேர்வு செய்யலாம். உங்கள் முன் ஒரு கருப்பு மற்றும் ஒரு வெள்ளை இரண்டு துளைகளை கற்பனை செய்து பாருங்கள். மூச்சை உள்ளிழுத்து, வெள்ளைத் துளையிலிருந்து சக்தியை எடுக்கவும். இந்த ஆற்றல் புதிய முயற்சிகள், புதுமையான கருத்துக்கள் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடத்தைகள் அல்லது பழக்கங்களின் வடிவத்தில் வரும். நீங்கள் மூச்சை வெளியேற்றும்போது, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளான வலி, சந்தேகம், குற்ற உணர்வு, அவமானம், அதிர்ச்சி, ஆத்திரம், துக்கம், பொறாமை ஆகியவற்றை நீங்கள் கற்பனை செய்த கருந்துளைக்குள் அனுப்புங்கள்.

World Meditation Day: உலக தியான தினம்… தியானம் செய்யத் தெரியவில்லையா? இவ்வளவுதான் விஷயம்… இதோ சிம்பிள் டிப்ஸ்!

  1. ஆகாஷ் கங்கா தியானம் - ஆகாய தியானம்

ஆகாஷ் கங்கா தியான் எனப்படும் தியான நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, நீங்கள் ஒரு மண் பானையைப் போல் கற்பனை செய்ய வேண்டும். நீங்கள் தியானம் செய்யும் போது முழு பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஊற்றுவதற்கு உதவும் ஒரு கொள்கலனாக உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் நுழைவதை நீங்கள் உணரும்போது, அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.

  1. மந்திர தியானம்

மனஸ்வானியின் யோகா நிபுணர் மான்சி குலாட்டி கூறுகையில், மன அழுத்தத்தைக் குறைக்க மந்திர தியானம் ஒரு சிறந்த வழியாகும் என்கிறார், மேலும் இது வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

  1. மனதைக் கவனியுங்கள்

தியானம் செய்வதற்கான ஒரு வழி உங்கள் மனதைக் கவனிப்பவராக மாறுவது என்று ரவியில் AiR ஆத்மன் கூறுகிறார். ஒருவர் மனதைக் கவனித்துக் கொண்டே இருப்பதால், எம்டிஆர் அல்லது மன எண்ண விகிதம் குறையும் என்று அவர் கூறுகிறார்.

  1. அமைதியாக இருங்கள்

தியானத்தின் நான்காவது வழி அமைதியாக இருப்பது என்று ரவியில் AiR ஆத்மன் கூறுகிறார். "நீங்கள் நிலையாக இருக்கும்போது, நீங்கள் அமைதியைக் காண்பீர்கள். தியானம் செய்வதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று" என்று அவர் கூறுகிறார்.

  1. ஐந்து புலன்களை அடக்கவும்

"இறுதியாக, நீங்கள் உண்மையிலேயே தியானம் செய்ய விரும்பினால், முதலில் உங்கள் வாழ்க்கைத் தேரின் ஐந்து குதிரைகளை, அதாவது ஐந்து புலன்களை அடக்க வேண்டும். இந்த ஐந்து குதிரைகள் உங்கள் வாழ்க்கையை வெவ்வேறு திசைகளில் இழுத்து செல்லும். உங்களால் உடல், மனம் மற்றும் அகங்காரத்தின் ஆசைகளை வெல்ல முடிந்தால், நீங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆசைகள், எண்ணங்கள் மற்றும் ஏக்கங்கள் உங்களைத் தாக்கி மூழ்கடிக்காத உணர்வு நிலையை அடைய முடியும். இந்த நிலையில் , எண்ணங்கள் முற்றிலுமாக அகற்றப்படுவதில்லை, மாறாக, அவைகள் ஒவ்வொன்றாக தனியாக வருகின்றன, ஒரு பரந்த கடலில் தனித்துச் செல்லும் மீன்கள் போல. அதுதான் தியானத்தின் நிலை," என்கிறார் AiR ஆத்மன்.

தலைப்பு செய்திகள்

திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget