அப்புறம் டயட் இருந்தாலும் நோ யூஸ்... சிறுவயதில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் மூளைக்கு ஆபத்தா?அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு
அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள், மனிதர்களின் உணவுப் பழக்கத்தை மாற்றுவதோடு, பசியைக் கட்டுப்படுத்தும் மூளையின் முக்கியப் பகுதியையும் பாதிக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வாழ்க்கையின் ஆரம்பத்தில் அதிக அளவில் துரித உணவுகளை (Junk Food) உட்கொள்வது, ஒருவர் பிற்காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலும் கூட, மூளையில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள், மனிதர்களின் உணவுப் பழக்கத்தை மாற்றுவதோடு, பசியைக் கட்டுப்படுத்தும் மூளையின் முக்கியப் பகுதியையும் பாதிக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அயர்லாந்து பல்கலைக்கழக ஆய்வில் வெளிவந்த உண்மை
அயர்லாந்தின் யுனிவர்சிட்டி காலேஜ் கார்க் (UCC) நடத்திய புதிய ஆய்வின்படி, அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் உணவுப் பழக்கம் மாறினாலும், மூளையில் அதன் நீண்டகால பாதிப்புகள் தொடர்கின்றன.
இருப்பினும், வயிற்றில் உள்ள சில நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் 'பிரியாபயாடிக் ஃபைபர்கள்' (Prebiotic fibres) இந்த பாதிப்புகளை ஓரளவிற்குச் சரிசெய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எடை குறைந்தாலும் மாறாத மூளையின் செயல்பாடு
UCC-ஐச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சி மையமான 'APC மைக்ரோபயோம்' (APC Microbiome) விஞ்ஞானிகள் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சிறுவயதில் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள், பசி மற்றும் உணவு உட்கொள்ளுதலைக் கட்டுப்படுத்தும் மூளையின் திறனை மாற்றியமைக்கின்றன. இந்த ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை நிறுத்தி, உடல் எடை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும் கூட, மூளையில் ஏற்பட்ட மாற்றங்கள் அப்படியே நீடிக்கின்றன என்பது தான் இதில் கவலைக்குரிய விஷயம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எளிதில் கிடைக்கக்கூடிய, விளம்பரப்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் (Processed foods) சூழப்பட்டுள்ளனர். பிறந்தநாள் விழாக்கள், பள்ளி நிகழ்வுகள், விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் நல்ல நடத்தைக்கான பரிசாகக் கூட சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் வழங்கப்படுவது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்தத் தொடர்ச்சியான தாக்கம், சிறுவயதிலேயே அவர்களின் உணவுத் தேர்வுகளை வடிவமைத்து, முதிர்வயது வரை நீடிக்கும் தவறான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி என்ன?
எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு
'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' (Nature Communications) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், அதிக கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை ஆரம்பகாலத்தில் உட்கொள்வது, பிற்கால உணவுப் பழக்கத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் இதற்காக எலிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர். சிறுவயதில் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொண்ட எலிகள், வளர்ந்த பிறகும் அதே போன்ற உணவுப் பழக்கத்தை மாற்றுவதில் சிரமத்தை எதிர்கொண்டன. இந்த நடத்தை மாற்றங்கள், பசி மற்றும் ஆற்றல் சமநிலையை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதியான 'ஹைபோதலாமஸ்' (Hypothalamus) பகுதியில் ஏற்படும் பாதிப்புகளுடன் தொடர்புடையவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Before You Go
Fengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!
ட்ரெண்டிங் செய்திகள்






















