சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
மது அருந்தும்போது இந்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? உயிருக்கே ஆபத்தாக முடியலாம்... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனாலும் அதை மீறி மது அருந்துபவர்கள், மதுவுடன் சேர்ந்து துணைக்கு சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். ஆனால் மது அருந்திய பிறகு சில உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மது அருந்தும்போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான உணவுகள்:
மது அருந்துவது உடலுக்குக் தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், மது அருந்துபவர்கள் அதனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் சில வகையான துணை உணவுகள் (Side dishes), கடுமையான நெஞ்செரிச்சல், ஜீரணக் கோளாறுகள் மற்றும் உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அகத்தி கீரை மற்றும் கீரை வகைகள்:
மது அருந்திய பிறகு கீரை வகைகளைச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, அகத்தி கீரை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மதுவோடு அகத்தி கீரை சேரும் போது அது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, மாரடைப்பு வரை கொண்டு சென்று உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்:
மது குடித்த பிறகு பால் அல்லது பாலாடைக்கட்டி (Cheese) போன்ற பால் பொருட்களை உட்கொள்வது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை முற்றிலும் பாதிக்கும்.
பர்கர் மற்றும் பேக்கிங் உணவுகள்:
அதிக கலோரிகளும் கொழுப்பும் கொண்ட பர்கர் போன்ற உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தும். மது அருந்துவதற்கு முன்போ அல்லது பின்புறமோ பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட பேக்கிங் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவுகள் மற்றும் முட்டை:
மது அருந்தும்போது பெரும்பாலானோர் அசைவ உணவுகள் மற்றும் முட்டையைத் தான் அதிகம் விரும்புகின்றனர். ஆனால், வாயுத் தொல்லை (Gas problem) மற்றும் ஆசிட் ரிப்ளக்ஸ் (Acid reflux) பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்:
எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை மதுவோடு சேர்த்துச் சாப்பிடுவது செரிமானத்தைப் பாதிப்பதோடு, உடலில் நீர்ச்சத்துக் குறைபாட்டை (Dehydration) தீவிரமாக்கும்.
சாக்லேட்:
சாக்லேட்டில் உள்ள கொக்கோ மற்றும் காஃபின் உடலின் வாயுத் தொல்லையை அதிகரிக்கும். மதுவினால் ஏற்கனவே வயிற்றில் ஆசிட் சுரப்பு அதிகமிருக்கும் சூழலில், சாக்லேட் சாப்பிடுவது வயிற்றைக் கடுமையாகப் பாதிக்கும்.
ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட், மதுவினால் ஏற்படும் ஆசிட் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கி, உடலில் உள்ள நீர்ச்சத்தையும் வேகமாகப் போக்கிவிடும்.
அதிக உப்பு மற்றும் காரமான உணவுகள்:
அதிக சோடியம் நிறைந்த உப்பு நொறுக்கு தீனிகள் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் மது அருந்தும் தூண்டுதலை உண்டாக்கும். அதேபோல, காரமான உணவுகள் வயிற்றின் உட்புறச் சுவர்களைப் பாதித்துச் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
மருத்துவர்களின் அறிவுரை:
பொதுவாகவே மது அருந்துவதைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. மீறி மது அருந்தினாலும், அதன்பின் உட்கொள்ளும் உணவுகள் மிக எளிதாக ஜீரணமாகக் கூடியவையாக இருப்பது அவசியம். நொறுக்கு தீனிகள் மற்றும் ஆபத்தான உணவுச் சேர்க்கைகளைத் தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற உடல்நலச் சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.
குறிப்பு: இந்தச் செய்தியில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ ரீதியான சந்தேகங்களுக்குத் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















