மேலும் அறிய

கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் சிறுதானிய தூதுவர்களாக செயல்பட வேண்டும் - தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை

தொற்று நோய்களுக்கு நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் தொற்றா நோய்களை நமது வாழ்க்கை முறைகள், உணவு பழக்கவழக்கங்கள் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும்

கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் சிறுதானிய தூதுவர்களாக செயல்பட்டு சிறுதானிய உற்பத்தி, தேவை, சந்தைப்படுத்துதல் போன்ற அனைத்து தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தினார்.


கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் சிறுதானிய தூதுவர்களாக செயல்பட வேண்டும் - தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை

சிறுதானிய உற்பத்தி:

தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் மாவட்ட வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், சிறுதானியங்கள் தொடர்பாக பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசும்போது, சங்க கால இலக்கியத்தில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

சங்க கால மக்களுக்கு சிறுதானியத்தின் முக்கியத்துவம் தேவையோ, இல்லையோ இப்போது உள்ள மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நமது ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் நமக்கு காய்ச்சல் போன்ற சிறிய நோய்கள் வந்தால்தான் தெரியும். தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் மூலம் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது.


கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் சிறுதானிய தூதுவர்களாக செயல்பட வேண்டும் - தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை

விழிப்புணர்வு:

தொற்று நோய்களுக்கு நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் தொற்றா நோய்களை நமது வாழ்க்கை முறைகள், உணவு பழக்கவழக்கங்கள் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும். இன்றைய இளையதலைமுறையினர் நிறைய பேருக்கு துரித உணவுகள் மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது. இளைஞர்களின் திறன் குறையும்போது பொருளாதார வளர்ச்சியும் குறையும். எனவே சத்தான பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலக அளவில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடமும் சிறுதானிய உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக நமது மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு பணிகள் கடந்த வாரம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் உற்பத்தி செய்வதற்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும்.



கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் சிறுதானிய தூதுவர்களாக செயல்பட வேண்டும் - தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை

மேலும் வரகு, குதிரைவாலி, சாமை, திணை, சோளம் போன்ற சிறுதானியங்களை 75 முதல் 120 நாட்களில் விளைவிக்க முடியும். இவற்றை விளைவிக்க இடுபொருட்களும் குறைவாகவே தேவைப்படும். கல்லூரி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் சிறுதானிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு தூதுவர்களாக செயல்பட்டு அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுதானிய உற்பத்தி, தேவை, சந்தைப்படுத்துதல் போன்ற அனைத்து தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். க்ஷ

சிறுதானிய உணவு வகைகள் அதிகளவில் உள்ளன. மேலும் கடலைமிட்டாய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்க முடியும். நீங்கள் வருங்காலத்தில் தொழில்முனைவோர்களாக உருவாவதற்கு அரசு பல்வேறு மானியங்கள் வழங்கி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு அரசு வங்கிகள் மூலம் 35 சதவீத மானியத்தில் கடன்கள் வழங்கப்படுகிறது. சிறுதானிய உணவு தயாரிப்பில் அதிக வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் அனைவரும் 18 வயது பூர்த்தி அடைந்தால் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றார்.


கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் சிறுதானிய தூதுவர்களாக செயல்பட வேண்டும் - தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை

முன்னதாக பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget