மேலும் அறிய

சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வையைப் பறிக்கும் விழித்திரை நோய்.. தற்காத்துக்கொள்வது எப்படி?

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுள் சுமார் 17.6 முதல் 28.9 சதவிகிதம் வரையிலான நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 20 முதல் 65 வரையிலானவர்களுக்குக் கண் பார்வை இழப்பு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நீரிழிவு விழித்திரை நோய். இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுள் சுமார் 17.6 முதல் 28.9 சதவிகிதம் வரையிலான நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் உழைப்புச் சக்தி குறைவதற்கும், பொருளாதார சரிவுக்கும் இந்த நோயின் பாதிப்பு மறைமுக காரணமாக அமைகிறது. 

`சிறிய வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, கண்ணில் எந்தப் பிரச்னையும் இல்லாத போதும், ஆண்டுதோறும் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’ என்கிறார் மருத்துவர் ராஜா நாராயணன். இவர் இந்திய விழித்திரை சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். 

நீரிழிவு விழித்திரை நீரிழிவு நோயால் படிப்படியாக ஏற்படுகிறது. கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையில் இது பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. 

சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வையைப் பறிக்கும் விழித்திரை நோய்.. தற்காத்துக்கொள்வது எப்படி?

பிறரோடு ஒப்பிடுகையில் நீரிழிவு நோயாளிகளுக்குக் கண் பார்வை இழக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், மருத்துவ நிபுணர்கள் சரியான நேரத்தில் சிகிச்சைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். 

கண் பார்வையில் தெளிவற்ற, மங்கலான நிலை ஏற்படுவது, சில நிறங்களுக்குக் கண் கூசுவது, பார்வையின் போது கரும்புள்ளிகள் தோன்றுவது, நேரான கோடுகள் வளைந்து தெரிவது, தொலைவில் இருப்பதைக் காண்பதில் சிரமம் கொள்வது, கண் பார்வை இழப்பது முதலானவை இந்த நோயின் அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. 

நீரிழிவு நோய், குளுகோஸ் அளவு, கொழுப்பு அளவு ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதனை மேற்கொண்டால் விழித்திரை நோயைத் தடுக்க முடியும். உடலில் குளுகோஸ் அளவைக் கண்காணிக்க ஸ்மார்ட்வாச்கள் தற்போது கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கலாம். 

சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வையைப் பறிக்கும் விழித்திரை நோய்.. தற்காத்துக்கொள்வது எப்படி?

நீரிழிவு விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் புகைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும், காய்கள், பழங்கள் நிறைந்த உணவு முறையைப் பின்பற்ற வேண்டும், தியானம், உடற்பயிற்சி முதலானவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். உடல் பருமன் இந்த நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பதால் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் இந்த நோயில் இருந்து பாதுகாப்பு தரும். 

தொடர்ந்து நீரிழிவு நோயைக் கண்காணிப்பது, கண் பரிசோதனைகளைப் போதிய இடைவேளைகளில் மேற்கொள்வது முதலானவை இந்த விழித்திரை நோய் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்கும். மேலும், வாழ்க்கை முறையை மாற்றுவது, பரிசோதனை செய்து விழித்திரை நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால் வழக்கமாக பரிசோதனை செய்துகொள்வது, சிகிச்சை எடுத்துக் கொள்வது முதலானவை பயன் தரும். இந்த விழித்திரை நோய் ஏற்படும் போது, மன நலப் பாதிப்புகளும் ஏற்படுவதால் அதனையும் சரியாகக் கையாள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget