மேலும் அறிய

Travel : மூணே நாள்ல ஒரு சோலோ ட்ரிப் போக ஆசையா? அரக்கு பள்ளத்தாக்கில் இருக்கு ஆயிரம் மேஜிக்..

அரக்கு பள்ளத்தாக்கானது ஆந்திராவின் இதயமாக கருதப்படுகிறது.

உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகமான சுற்றுலாத்தலங்கள்  உள்ளன .இதனால்  உலகளவில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையானது குறைந்தது .

தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்தானது அதிகரித்துள்ளது. அதேபோல்  இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கு பெயர் போனது. அரக்கு பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இது காடுகள் அடர்ந்த அழகிய பகுதியாக இருப்பதால் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. மேலும் இப்பகுதி காப்பித் தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 911 மீட்டர் உயரத்தில் உள்ளது.

அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள 30 போரா குகைகள் நூற்றாண்டுகளுக்கு மேலாக அழகிய கற்களின் மடிப்புகளைக் கொண்டுள்ளது. இவைகள் 705 மீட்டர் உயரத்தில், உலகின் மிகப்பெரிய குகைகளுள் ஒன்றாக உள்ளது. கோஸ்தனி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த குகைகளில் அழகிய மலைகளும் சூழ்ந்துள்ளன. இப்பள்ளத்தாக்கு விசாகபட்டிணத்தில் இருந்து 116 கிலோமீட்டர் தொலைவில் ஒடிசா எல்லையில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதன் பரப்பளவு தோராயமாக 36 சதுர கிலோ மீட்டர்கள்.

அரக்கு பள்ளத்தாக்கானது ஆந்திராவின் இதயமாக கருதப்படுகிறது. இந்த அரக்கு பள்ளத்தாக்கு  சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கவும், இயற்க்கையின் அழகை கண்டு திளைக்கவும்,  பரவசமாகவும் வைக்கிறது. நாம்  ஒரு இனிமையான அழகான இடத்தில் இருப்பது போன்ற உண்மையான மனதை  மயக்கும் உணர்வுகளைப் நமக்கு கொடுக்கும். நாம் குடும்பத்துடன் சென்று ரசிக்க சிறந்த விடுமுறை இடமாகும்.ஏனெனில் இது உங்களுக்கு சொர்க்க அதிர்வை அளிக்கிறது மற்றும் இந்த இடத்தின் அழகு நாம் வாழ்நாளில் நமது கண்கள்  கண்டிராத ஒன்றாக இருக்கும்.

இந்த பள்ளத்தாக்கு கடல் மட்டத்தில் இருந்து  2,990 அடி உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஈர்க்கக்கூடிய காட்சியால் சூழப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர்கள் பார்வையிட சிறந்த இடமாக இந்த  பள்ளத்தாக்கு ஆனது உள்ளது. இந்த அரக்கு பள்ளத்தாக்கு நேர்த்தியான பல்லுயிர் மற்றும் அதிகளவு வருமானத்தை தரக்கூடிய பச்சை தேயிலை மற்றும் காபி பண்ணைகளின் அழகையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய அரக்கு பள்ளத்தாக்கிற்கு வருகை தர  சுற்றுலா பயணிகள் அதிக அளவு குளிர்காலங்களையே விரும்புகின்றனர். இதனால் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அரக்கு பள்ளத்தாக்கு உறைபனி வெப்பநிலையில் பிரமிக்க வைக்கிறது.செப்டம்பர் முதல் மே மாதம் வரை அரக்கு பள்ளத்தாக்கில் வானிலை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

ஆந்திர பிரதேசத்தில் அரக்கு பள்ளத்தாக்கு  பகுதியில் பார்க்க வேண்டிய சில இடங்கள்;

1.சாப்பறை அருவி:

இங்கு பிரமிக்க வைக்கும் இடங்களில் சப்பாறை நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும்.இது டம்ப்ரிகுடா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதனை சுற்றி அனைத்து பகுதிகளும் காடுகளாக சூழப்பட்டுள்ளது. இது பள்ளத்தாக்கிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் சென்று கண்டு களிக்க ஒரு சிறந்த இடமாக உள்ளது . புத்துணர்ச்சியூட்டும் ஆற்றலையும் அனுபவங்களையும் பெற கோடைக்காலத்தில் வருகை தங்குவது சிறந்ததாக இருக்கும்.இது டும்பிரிகுடா மண்டலத்தில் அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இது திறந்து இருக்கும். இதன் டிக்கெட் விலை ரூ. 10 மட்டுமே ஆகும்.

2. அனந்தகிரி மலைகள்:

அரக்கு மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஒரு சிறிய மலைவாசஸ்தலம் அமைந்தது. இது அருணாச்சல பிரதேசஷ் போல மிகவும் பிரம்மிபூட்டும் அழகான  மலைவாசஸ்தலம் ஆகும். உங்களை ஆச்சரியப்படுத்தும் காபி தோட்டங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின்  கலவையை நாம் கண்டுகளிக்கலாம் . இந்த போற்றத்தக்க எழில் மிகு தலம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலாவிற்கு பயணிகளை இருக்கும் ஒரு பகுதியாகும் . தென்னிந்தியாவின் தெலுங்கானாவில் அமைந்துள்ள இந்த இடத்தை பகல் நேரத்தில் இலவசமாகப் பார்வையிடலாம்.

3. போரா குகைகள்:

போரா குகைகள் நாட்டின் மிகப்பெரிய குகைகளாகும். நாம் விசாகப்பட்டினத்திற்கு சென்றாலோ அல்லது அங்கு தங்கியிருந்தாலோ போராக்குகளை கண்டுகளிப்பது இனிமையை சேர்க்கும்.இது சுமார்
 705 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைகள் கர்ஸ்டிக் சுண்ணாம்புக் கல்லால் ஆனது.சுற்றுலாப் பயணிகளின் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இந்த பகுதி நிலைத்திருக்கும்

4. பத்மபுரம் தாவரவியல் பூங்கா:

இந்த பத்மபுரம் தாவரவியல் பூங்கா அதன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பிரபலமானது. இது அரக்கு பள்ளத்தாக்கின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். மிகவும் அரிதான மலர்கள், மரங்கள் மற்றும் மர குடிசைகளை நாம் இங்கு காணலாம். இரண்டாம் உலகப் போரின் போது, ​​வீரர்கள் உணவுப் பொருட்களைப் பெற்ற இடமாக இது போற்றப்படுகிறது. தற்போது இந்த பகுதி  தெலுங்கானா மாநிலத்தின் சுற்றுலா  பகுதியாக இது ஒரு அழகான தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

5.. போங்குலோ சிக்கன்:

அரக்கு பள்ளத்தாக்கில் போங்குலோ சிக்கன் ஒரு பிரபலமான உணவாகும். ருசியான உணவு சாப்பிட மிகவும் பிரபலமான  இடமாக இது கருதப்படுகிறது. இதனை தயாரிப்பதற்கு, ஒரு தனித்துவமான சமையல் முறை பயன்படுத்தப்படுகிறது. அந்த மாநிலத்தில் பிரபலமான பல உணவுகள் இருக்கின்றன அதில்‌ மதுகுலா அல்வா மற்றும் டீபி அவகாயா ஆகிய  இனிப்பு உணவு வகைகளை உண்டு மகிழலாம். இவை ஆந்திராவில் சுமார் ரூ.100 விலையில் எளிதாகக் கிடைக்கின்றன. 

6. அரக்கு பழங்குடியினர் அருங்காட்சியகம்;

இது ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
பழமை வாய்ந்த கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஆர்வத்திற்கான உங்கள் தாகத்தைத் தணிக்க இந்த இடம் சரியானது. அரக்கு பழங்குடியினர் அருங்காட்சியகம் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த இடம் அரக்கு பள்ளத்தாக்கின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றியது, அதன் வரலாற்று கடந்த காலத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரமாக , காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை, பெரியவர்களுக்கு ரூ. 40, மற்றும் ரூ. குழந்தைகளுக்கு 20. என விளை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பழங்குடியினர் அருங்காட்சியகத்தில்  சுவாரஸ்யமான சேகரிப்புகள், மற்றும் குறிப்பிடத்தக்க கலைப்பொருட்கள் பிரபலமானவை.

அரக்கு பள்ளத்தாக்கில் எங்கு தங்குவது?

சிறந்த தங்கும் இடங்களை வழங்கும் ஏராளமான ஓய்வு விடுதிகள், லாட்ஜ்கள், விடுதிகள் மற்றும் அரக்கு பள்ளத்தாக்கு ஹோட்டல்கள் உள்ளன. கார்டன் சாலைக்கு அருகிலும் பட்ஜெட்டுக்கு ஏற்ற தங்கும் விடுதிகள் உள்ளன.

ரிசார்ட்டுகள் கூட பசுமை மற்றும் மலைகளின் சரியான காட்சியை வழங்குகின்றன, மேலும் அவை சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. விடுமுறையைக் கழிக்க இது ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. மிக முக்கியமாக, கார் பார்க்கிங், கார் வாடகை மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற சேவைகளை நீங்கள் எளிதாகப் பெறலாம்.

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget