மேலும் அறிய

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? SSC அறிவித்துள்ள 3600 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்..

கணினி வழி தேர்வு (Computer Based Examination), எழுத்து தேர்வு (Descriptive Paper) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசுத்துறையில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட 3600 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப்பணியில் சேர்ந்துப்பணியாற்ற வேண்டும் என்ற ஆசை பலரும் இருக்கும். ஆனால் இப்பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களைத் தான் நியமனம் செய்ய வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.சி (Staff selection committee – SSC) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பன்முக உதவியாளர், ஹவால்தார்  உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிரப்பப்படவுள்ள நிலையில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? SSC அறிவித்துள்ள 3600 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்..

மொத்த காலிப்பணியிடங்கள் – 3600க்கு அதிகமானது என அறிவிக்கப்பட்டது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

1-1-2022 அன்றின் படி 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வுகள் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ssc.nic.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

பின்னர் அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய  கடைசி தேதி: ஏப்ரல் 30, 2022.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப்பிரிவினருக்கு ரூ. 100ம் மற்றும்  SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), எழுத்து தேர்வு (Descriptive Paper) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த கணினி வழி தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் ஹவால்தார் பணியிடங்களுக்கு மட்டும் கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதிவாய்ந்த இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்புக் குறித்த கூடுதல் விவரங்களை,   https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22032022.pdf என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

1,000 அரசு பணியிடங்கள்... விரைவில் எழுத்துத் தேர்வு! புதுவை இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
1,000 அரசு பணியிடங்கள்... விரைவில் எழுத்துத் தேர்வு! புதுவை இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்! 150+ நிறுவனங்கள்... 8-ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை அனைவருக்கும் வாய்ப்பு!
விழுப்புரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம்! 150+ நிறுவனங்கள்... 8-ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை அனைவருக்கும் வாய்ப்பு!
UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
பைக் உள்ளதா? பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்! விவரம் இதோ
பைக் உள்ளதா? பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்! விவரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget