மேலும் அறிய

ஆவின் விற்பனை முகவராக ஆகுங்கள்! மயிலாடுதுறையில் வாய்ப்பு! குறைந்த விலையில் பால் பொருட்கள், லாபம் உறுதி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய விற்பனை நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்), தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் தனது சிறப்பான விற்பனைச் சேவையைத் தொடர்ந்து, விற்பனையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய விற்பனை நிலைய முகவர்கள் மற்றும் தாலுக்கா வாரியான மொத்த விற்பனையாளர்களைத் தேடி வருவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் விரிவான செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அமோக விற்பனையில் ஆவின்

தஞ்சாவூர் ஆவின் ஒன்றியத்தின் செயல்பாட்டு எல்லைக்கு உட்பட்ட இந்த நான்கு மாவட்டங்களிலும், நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 69,336 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பாதாம் பவுடர், மில்க் பிஸ்கட், குக்கீஸ் பிஸ்கட், மில்க்ஷேக், மாவின், பனீர், பால் பவுடர், சாக்லேட், ஃப்ளேவர்ட் மில்க், தயிர், மோர் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பால் பொருட்களின் விற்பனை மாதந்தோறும் சராசரியாக ஒரு கோடி ரூபாய் அளவில் உள்ளது.

பரந்துபட்ட முகவர் வலையமைப்பு

ஆவின் பொருட்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில், இவ்வொன்றியத்தில் சுமார் 544 முகவர்களும், 51 மொத்த விற்பனையாளர்களும், 61 பாலக முகவர்களும் செயலாற்றி வருகின்றனர். தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருட்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

ஆவின் பொருட்கள் தரமாகவும், தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களிடம் இவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விற்பனை முகவர்கள் மற்றும் பாலகங்கள் மூலமாகவே பொருட்கள் மக்களை சென்றடைகின்றன.

முகவர்களுக்குப் பொருளாதார மேம்பாடு

முகவர்கள் மூலம் விற்பனையாகும் பொருட்களுக்கு, ஆவின் ஒன்றியத்தால், பொருள் வாரியாக கமிஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான முகவர்கள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்து, பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்து பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

விற்பனையை விரிவுபடுத்த புதிய வாய்ப்புகள்

இந்நிலையில், ஆவின் தனது சேவையை மேலும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு, முக்கியமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆவின் விற்பனை நிலையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கு அதிகளவிலான புதிய முகவர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்பட விருப்பமுள்ளவர்கள், தாமதமின்றி உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை நேரில் அணுகிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நான்கு மாவட்டங்களிலும் தாலுக்கா வாரியாக ஆவின் பால் பொருட்களுக்கான மொத்த விற்பனையாளர்களும் இவ்வொன்றியத்திற்கு தேவைப்படுகின்றனர். தாலுக்கா வாரியான மொத்த விற்பனையாளர்களாகச் செயல்பட விருப்பம் உள்ளவர்களும் உடனடியாக ஆவின் ஒன்றியத்தை நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலைய முகவர் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் குறித்த மேலும் விவரங்களுக்கு, விருப்பமுள்ள நபர்கள் 8015304755, 8015304766 அல்லது 8807983824 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தரமான, குறைந்த விலையிலான ஆவின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, பொருளாதாரப் பலன் பெற விரும்பும் அனைவருக்கும் இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும் என்று ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Tamilisai Sholinganallur constituency : சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
Top 10 News Headlines: கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Tamilisai Sholinganallur constituency : சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
Top 10 News Headlines: கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. ! இனி கட்டாயம் இதை செய்தே ஆகனும்- வெளியான சுற்றறிக்கை
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. ! இனி கட்டாயம் இதை செய்தே ஆகனும்- வெளியான சுற்றறிக்கை
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
Embed widget