Private jobs: வேலை தேடுவோருக்கு நற்செய்தி! தனியார் வேலைவாய்ப்பு முகாம்: உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நாளை 20.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதேபோல் தேனி மாவட்டத்திலும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பலர் தனியார் துறையில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நடத்தும் இம்முகாம், சென்னை–32, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.
20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைதேடுவோர் மற்றும் வேலையளிப்போர் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நாளை (பிப்.20) காலை 10 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், தொழில் பயிற்சிப் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தையல், செவிலியா் பயிற்சிப் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். முகாம் குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கைப்பேசி எண்: 98948 89794-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.























