மேலும் அறிய

தமிழக மீன்வளத்துறையில் உதவியாளர் வேலை ரெடி! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.. சம்பளம் இவ்வளவு..

மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஜனவரி 1, 2021 நிலவரப்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவுக்கு 35 வயது எனவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது

தமிழக அரசில் மீன்வளத்துறையின் கீழ் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், தமிழில் எழுத, படிக்கத்தெரிந்திருப்பதோடு மீன்பிடி வலைகளைக் கையாள்வதில் தேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற தகுதிகள் உள்ளன.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக உணவு வழங்குவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது தமிழக மீன்வளத்துறை. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாராம்பரிய மீனவர்களின் உரிமைகளை பாதுகாத்துதல் போன்ற பல்வேறு மீனவப் பிரச்சனைகளை சரிசெய்து வருவதிலும் இத்துறை முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இதனை நிர்வகிக்க பல்வேறு துறைகளின் கீழ் அதிகாரிகள் பலர் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவரும் நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மீன்வள உதவியாளர் காலியாக உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக மீன்வளத்துறையில் உதவியாளர் வேலை ரெடி! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.. சம்பளம் இவ்வளவு..

சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காலியாக மீன்வள உதவியாளர் பணி காலியாக உள்ளது எனவும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் , தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதனன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் மீன்வள உதவியாளர்  பணி காலியாக உள்ளது எனவும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் கண்டிப்பாக நீச்சல், மீன்பிடித்தல், வலைப்பின்னுதல், பரிசல் ஓட்டுதல், வீச்சு வலைப்பயன்படுத்துதல், வலை வீசுதல் மற்றும் அறுந்த வலைகளை  சரி செய்யத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவிப்பில் கூறியுள்ளார். இதோடு மீன்வளத்துறையின் மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருப்போருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஜனவரி1, 2021 நிலவரப்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவுக்கு 35 வயது எனவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது, இதர பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்ற தகுதியினைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தமிழக மீன்வளத்துறையில் உதவியாளர் வேலை ரெடி! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.. சம்பளம் இவ்வளவு..

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட தகுதியும் , ஆர்வமும் இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஜாதிச்சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் மீன்வளம் ம்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், கதவு எண் 5-3, கார்ப்பரேஷன் மாடியில், பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை- 630 561 ( தொலைப்பேசி எண்- 04575 -240848) என்ற  முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் மறக்காமல், விண்ணப்ப உறையின் மேல் சிவகங்கை மாவட்ட மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என எழுதி அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget