பெண்கள் கவனத்திற்கு... கணக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
பெண்கள் மற்றும் சமூக நலத்துறைகளுக்கான நிதி மேலாண்மையில் முக்கிய பங்காற்றும் இந்தப் பணிக்கு தகுதியுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அரசின் கீழ் செயல்படுத்தி வருகிறார். மேலும் மக்கள் குறைகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தவிர மாவட்ட பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என முயற்சிகள் பல செய்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர் பணியிடத்திற்கு தற்காலிக பணியாளர்களை நிரப்ப விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் கணக்கு உதவியாளர் பணியிடத்திற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். இந்த பணியிடம் முழுமையாக ஒப்பந்த அடிப்படையிலானது என்பதுடன், ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருவோர் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.அக்கவுண்டன்ட் சார்ந்த டிப்ளமா அல்லது பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவம் அவசியம்.
இந்தப் பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் முழுமையான தகவல்களை dindigul.nic.in என்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூக நல அலுவலகம்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,அறை எண்: 88 (தரை தளம்),மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,திண்டுக்கல் – 624004.
விண்ணப்பங்கள் 15.07.2025 மாலை 5.45 மணிக்கு முந்திய நேரத்துக்குள் வந்திருக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்றும், இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த பணியிடம் தகுதியும் அனுபவமும் கொண்ட நபர்களுக்கான சிறந்த வாய்ப்பு என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெண்கள் மற்றும் சமூக நலத்துறைகளுக்கான நிதி மேலாண்மையில் முக்கிய பங்காற்றும் இந்தப் பணிக்கு தகுதியுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















