மேலும் அறிய

National Deworming Day: குடல் புழு நீக்க தினம் - குழந்தைகளுக்கு வரும் குடற்புழுக்களுக்கான  காரணம் மற்றும் தீர்வு என்ன..?

குழந்தைகளின் சிறுகுடலில் குடற்புழுக்கள் ஆழமாக பதிந்து அதில் உள்ள இருக்க ரத்தத்தை உறிஞ்ச தொடங்கும். இதனால், குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில், இந்தியாவில் குடல் புழுக்கள், அவற்றின் வகைகள், வளரும் குழந்தைகளில் அவற்றின் தடுப்பு நுட்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு மண்ணால் பரவும் ஹெல்மின்த்ஸ் (STH) முழுவதுமாக ஒழிக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. 

தற்போது குழந்தைகளுக்கு வரும் குடற்புழுக்களுக்கான  காரணம் மற்றும் தீர்வு என்ன? என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்மோகான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இனிப்புகள் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் வருவதில்லை. இரண்டு காரணங்களுக்காக வருகிறது. ஒன்று தெருவில் அல்லது வேறொரு இடத்திலோ செருப்புகள் அணியாமல் சென்றால் கால்களின் இடுக்குகளின் வழியே, ஆரம்ப நிலையில் இருக்கும் குடற்புழுக்கள் உள்ளே நுழைந்து அவை ரத்தத்திற்குள் சென்று நுரையீரல் வரைக்கும் சென்று மறுபடியும் உணவு பாதைக்குள் வந்து அது வழியாக குடற்புழுக்கள் வருகிறது. இது கால் வழியாக வரும் குடற்புழுக்கள் ஆகும். 

மற்றொரு வகை. காய்கறிகள், முட்டைகள் சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டால் அது வகையாக வரும். இந்த இரண்டு வழியாக குழந்தைகளில் குடல்களுக்கு சென்று புழுக்கள் வளர ஆரம்பிக்கும்” என்று கூறினார்.

குழந்தைகளுக்கு பூச்சி மருந்து எந்த வயதில் கொடுக்க வேண்டும்

ஒரு வயதை தாண்டிய அனைத்து குழந்தைகளுக்கும் பூச்சி மருந்தை கொடுக்கலாம். அரசாங்கமே வருடத்திற்கு இரண்டு முறை இதற்கான மருந்தை கொடுக்கிறது. மேலும், வெளியில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்தை கொடுக்கலாம். 1 வயது முதல் 2 வயது வரை பாதி டோஸ் கொடுக்கலாம். 2 வயதுக்கு ஒரே அளவில் கொடுக்கலாம். ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும். பூச்சி மருந்து கொடுத்தும் புழுக்கள் நீங்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி அவர்கள் கூறுவது பூச்சி மருந்தை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி குடற்புழுக்கள் பிரச்சனை ஏற்பட்டால், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பூச்சி மருந்தை சாப்பிட வேண்டும். பெரியவங்களுக்கு மாத்திரையாகவும், குழந்தைகளுக்கு சிரப்பாகவும் கொடுக்க வேண்டும்.

குடற்புழுக்களினால் ஏற்படும் தொந்தரவுகள்

குழந்தைகளின் சிறுகுடலில் குடற்புழுக்கள் ஆழமாக பதிந்து அதில் உள்ள இருக்க ரத்தத்தை உறிஞ்ச தொடங்கும். இதனால், குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படும். அதனைத்தொடர்ந்து, குடற்பகுதியில் உள்ள சத்துக்களை உறிஞ்ச தொடங்கிவிடும். இதனால், குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், அவர்களின் உடலில் ரத்தம் இருக்காது. இதனால், ரத்த சோகை, அனீமியா ஏற்படும். இதன்மூலம், குழந்தைகளுக்கு சரியான பசி ஏற்படாது. மந்தமாக இருப்பார்கள். படிப்பில் ஆர்வம் குறையும். ஆசன வாயிலில் அரிப்பு ஏற்படும், வெள்ள தழும்புகள் தோன்றும் இந்த மாதிரி அறிகுறிகள் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !
கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !
சிவகங்கை மண்ணுக்கு கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம்... விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு !
சிவகங்கை மண்ணுக்கு கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம்... விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு !
காது கேளாமை குழந்தைகளுக்கு புதிய வாழ்வு... அரசு மருத்துவமனையில் 145 குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கை!
காது கேளாமை குழந்தைகளுக்கு புதிய வாழ்வு... அரசு மருத்துவமனையில் 145 குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கை!
பிராய்லர் கறி சாப்பிட்டால் சீக்கிரம் வயசுக்கு வந்துவிடுவார்களா? மருத்துவர் விளக்கம்!
பிராய்லர் கறி சாப்பிட்டால் சீக்கிரம் வயசுக்கு வந்துவிடுவார்களா? மருத்துவர் விளக்கம்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget