மேலும் அறிய

Blood Sugar : சர்க்கரை நோயாளிகள் வீட்ல இருக்காங்களா? இந்த 5 இலைகளை பத்தி நிச்சயமா படிங்க..

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இலைகள் குறித்து காணலாம்.

நீரிழிவு நோய் என்றும் அழைக்கப்படும் உயர் இரத்த சர்க்கரை, நீண்டகால ஆரோக்கியத்துக்கு பிரச்சனைகளை  ஏற்படுத்துகிறது. இந்த நோய் நம் உடலை உள்ளிருந்து பலவீனப்படுத்துகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்,  சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால், அது நம் உறுப்புகளைப் பாதிக்கத் தொடங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டாவிட்டால், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்களையும் சந்திக்க நேரிடும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில், நீரிழிவு நோய் உலக அளவில் ஏழாவது பெரிய தொல்லை நோயாக இருக்கும்  மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தவிர, நமது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். இயற்கையில் பல  இலைகள் உள்ளன, அவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்  இலைகள் குறித்து இந்த தொகுப்பில்  பார்க்கலாம். 

அஸ்வகந்தா இலைகள்:

ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை, அஸ்வகந்தா - இந்திய ஜின்ஸெங் என்றும் அழைக்கப்படுகிறது - நீரிழிவு நோய்க்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறிப்பாக வகை 2 (Type 2) நீரிழிவு நோயாளிகளுக்கு  பயனுள்ளதாக இருக்கும். சில நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்த ஓட்டத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதன் மூலம், அஸ்வகந்தா இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதன் வேர் மற்றும் இலை சாறாக்கி பயன்படுத்தலாம்.  அஸ்வகந்தா இலைகளைப் பயன்படுத்தினால், அவற்றை வெயிலில் உலர வைத்து, பின்னர் அவற்றை பொடியாக அரைத்து, அந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், அது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

கறிவேப்பிலை:
நார்ச்சத்து மற்றும் தென்னிந்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். கறிவேப்பிலை நார்ச்சத்து நிறைந்தது மற்றும் நார்ச்சத்து செரிமான விகிதத்தை குறைப்பதாக கூறப்படுகிறது, எனவே இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலையில் சில கறிவேப்பிலைகளை மென்று சாப்பிட வேண்டும். 

மா இலைகள்:
பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாம்பழ இலைகள் உயர் இரத்த சர்க்கரை மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது என்று அறியப்படுகிறது. எனவே மா இலைகளை எப்படி சாப்பிடுவது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. முதலில் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதன் பின்னர் இந்த நீரை இரவு முழுவதும் விட்டு, காலையில் வடிகட்டி குடிக்கவும்.

வெந்தய இலைகள்:
வெந்தய இலைகள் அதிக ஆயுர்வேத பண்புகள் நிறைந்துள்ளன, எனவே அவற்றினை உணவில் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இவற்றின் இலைகள் அல்லது விதைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.

வேப்ப இலைகள்:
வேப்ப இலைகள் கசப்பாக இருக்கலாம் ஆனால் அவை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. வேப்ப இலைகளை தவறாமல் உட்கொள்வது  இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஒருவர் வழக்கமாக வேப்பம்பூ சாறு சாப்பிடலாம் அல்லது ஒரு கைப்பிடி இலைகளை மென்று சாப்பிடலாம். அதேநேரத்தில் கவனமாக இருக்கவேண்டும் மற்றும் அதை அதிகமாக பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் சில சந்தர்ப்பங்களில், சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருக்கும். எனவே  இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்த பின்னர் இவற்றினை உணவில் எடுத்துக்கொள்ளலாம். 

(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். அதை ஏற்றுக்கொள்ளும் முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ABP NADU இதை உறுதிப்படுத்தவில்லை.)

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
ஆசிரியர்களின் தீராத பிரச்சினை.. செவி சாய்க்குமா... தமிழ்நாடு அரசு...
ஆசிரியர்களின் தீராத பிரச்சினை.. செவி சாய்க்குமா... தமிழ்நாடு அரசு...
Embed widget