மேலும் அறிய

வடதமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம் என்ன?

வட தமிழ்நாட்டில் இன்று 846 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 251 , வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 156, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92 , திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110 என பதிவாகியுள்ளது .

வடதமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம் என்ன?
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான (சென்னை தவிர்த்து) காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருவண்ணாமலை , விழுப்புரம் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று புதியதாக 846 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை , 1024 ஆக உள்ளது. மேலும் வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , விழுப்புரம் , திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு பலனின்றி இறந்து போனவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது . இன்றைய நிலவரப்படி இந்த 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4946 ஆக உள்ளது .

வடதமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம் என்ன?
கொரோனா தமிழ் நாட்டில் கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் , கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ் நாடு சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது .இதில்  முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்ட நிலையில் . தற்பொழுது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் தடுப்பூசி போடும் பனி சுகாதார துறையால் தீவிரப்படுத்தப்பட்டு , நேற்று முன் தினம் நிலவரப்படி கொரோனா முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 24 .97 கோடியை கடந்துள்ளது .
 

வடதமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம் என்ன?
இது தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 .7 சதவீதமாகும் . இதேபோல் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 5 .16 கோடியாக உயர்ந்துள்ளது . இது தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3 .8 சதவீதமாகும் . வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் தடுப்பூசிகளுக்கு நாளுக்கு நாள் சிறப்பு தடுப்பூசி மையங்கள் மாறுபட்டாலும் . நிரந்தரமாக 11 தடுப்பூசி மையங்கள் செயல் பட்டுவருகின்றன .
 
 
இதில் வேலூர் மாநகராட்சி பகுதியிலுள்ள ஹோலி கிராஸ் பள்ளி சத்துவாச்சாரியிலும் , காட்பாடி டான் போஸ்கோ பள்ளியிலும் , வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும் , ஜெயின் சங்கம் சார்பில் ஜெயரம்செட்டி தெருவிலும் நிரந்தர தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றது .இதே போல் அணைக்கட்டு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும் , கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் , கே வி குப்பம் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திலும் , குடியாத்தம் பகுதியில் சந்தைப்பேட்டை சமுதாய கூடத்திலும் , சரஸ்வதி வித்யாலயா பள்ளியிலும் மற்றும் திருவள்ளுவர் மேல்நிலை பள்ளி என குடியத்தில் மூன்று இடங்களிலும் , பேர்ணாம்பட்டு பகுதியில் இஸ்லாமிய உயர் நிலை பள்ளியிலும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்த பட்டு வருகின்றது .

வடதமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம் என்ன?
 
இந்த 11 மையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் என 31 தடுப்பூசி மையங்களில் , நாள் ஒன்றுக்கு 5000 நபர்கள் என இதுவரை 2 .85 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . இது வேலூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய மொத்த மக்கள் தொகையில் 25 .55 சதவீதமாகும் .
 

வடதமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம் என்ன?
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 755 நபர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி செழித்து கொண்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்தி 167.  காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை ஒரு நபர் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget