மேலும் அறிய

ஓமிக்ரான் வைரஸ் தயார்நிலை : 100 படுக்கைகளுடன் புதுச்சேரியில் ஓமிக்ரான் சிறப்பு வார்டு அமைப்பு..

ஓமிக்ரான் வைரஸ் பாதித்தால் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது

ஓமிக்ரான் வைரஸ் பாதித்தால் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்தநிலையில் தற்போது தினமும் பாதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 30 ஆக இருந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது.

இதையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்  என சுகாதாரத்துறைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் விரிவான சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி புதுச்சேரியில் தற்போது கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:

ஒமைக்ரான் வைரஸ் என்பது தனியான தொற்று கிடையாது. அது உருமாறிய கொரோனா தான். வெளிநாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து தேவையான பரிசோதனைகள் மேற்கொள்வார்கள். மாநில எல்லைகளில் காவல்துறையுடன் இணைந்து சோதனைகள் நடத்த உள்ளோம். ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் 160 படுக்கைகள் உள்ளது. இதில் தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். தேவைப்பட்டால் அந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

கொரோனாவுக்கு செய்யப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைதான் ஒமைக்ரான் வைரசை கண்டறியவும் செய்யப்படும். இதுதொடர்பான நவீன ஆய்வகங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் 99 பேருக்கு பரிசோதனை செய்து 2 மணி நேரத்தில் முடிவுகளை அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget