மேலும் அறிய

கைகழுவு ! கவசமிடு ! விலகியிரு ! கரூர் மாவட்ட ஆட்சியரின் கொரோனா விழிப்புணர்வு!

"கொரோனா இல்லா கரூர்" என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்க பதாகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்திட்டார்.

கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பையும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வாசிக்க பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் நின்று பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


கைகழுவு ! கவசமிடு ! விலகியிரு ! கரூர் மாவட்ட ஆட்சியரின் கொரோனா விழிப்புணர்வு!


பின்னர், பேருந்துநிலையத்தில் "கொரோனா இல்லா கரூர்" என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்க பதாகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கைகழுவு! கவசமிடு! விலகியிரு!" என்ற வாசகத்தை எழுதி கையெழுத்திட்டார். அவரைத்தொடர்ந்து அரசு அலுவலர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து கொரோனா தொற்றைத் தடுப்பதில் தங்கள் பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் கெயெழுத்திட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கும், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்தவர்களுக்கும் வழங்கினார்.


கைகழுவு ! கவசமிடு ! விலகியிரு ! கரூர் மாவட்ட ஆட்சியரின் கொரோனா விழிப்புணர்வு!

 பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
 
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று முதல் "கொரோனா இல்லா கரூர் - கைகழுவு! கவசமிடு! விலகியிரு!" என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. முதல்நாள் நிகழ்வாக கரூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

 


கைகழுவு ! கவசமிடு ! விலகியிரு ! கரூர் மாவட்ட ஆட்சியரின் கொரோனா விழிப்புணர்வு!


இரண்டாம் நாளான 02.08.2021 அன்று கரூர் இரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளுவர் மைதானம் வரையில் கொரோனா விழிப்புணர்வு வாகனப்பேரணி நடத்தப்படவுள்ளது. திருவள்ளுவர் மைதானத்தில் சமூக இடைவெளியுடன் மாபெரும் கைகழுவும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

மூன்றாம் நாளான 03.08.2021  அன்று கரூர் நகரப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தும் நிகழ்வும், அனைத்து வியாபரிகள் சங்க பிரதிநிதிகள் பங்குபெறும் உறுதிமொழி எற்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.


கைகழுவு ! கவசமிடு ! விலகியிரு ! கரூர் மாவட்ட ஆட்சியரின் கொரோனா விழிப்புணர்வு!

 
04.08.2021 அன்று நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிப்பவர்களிடம் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வைப்பதற்கான உறைகள் வழங்கப்பட உள்ளது. இந்த உறைகளில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள குறும்படப்போட்டிகளுக்கு வரப்பெற்றுள்ள குறும்படங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரையிடப்பட்டு சிறந்த குறும்படங்களை உருவாக்கியவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 


கைகழுவு ! கவசமிடு ! விலகியிரு ! கரூர் மாவட்ட ஆட்சியரின் கொரோனா விழிப்புணர்வு!


05.08.2021 அன்று கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஓவியப்போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகளில் பங்குபெற்ற படைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 

06.08.2021 அன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்.இ.டி. வாகனத்தின் மூலம் கொரோனா தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் கிராமங்கள்தோறும் திரையிடப்படுவதற்காக நிகழ்வு துவக்கப்படவுள்ளது. கரூர் பேருந்து நிலையம் மற்றும் ஜவஹர் பஜார் உள்ளிட்ட இடங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்துவது.


கைகழுவு ! கவசமிடு ! விலகியிரு ! கரூர் மாவட்ட ஆட்சியரின் கொரோனா விழிப்புணர்வு!

07.08.2021 அன்று கிராம ஊராட்சிகள் , நகராட்சி வார்டுகளில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்காக உழைத்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
 
இந்த ஒருவார கால நிகழ்ச்சி என்பது, கொரோனா தொற்றின் தாக்கம் குறித்தும், தொற்றை தடுப்பதற்காக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்துமான தாக்கமும், விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படுகின்றது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா இல்லாத கரூர் மாவட்டத்தை உருவாக்கிட தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget