மேலும் அறிய

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

கொரோனா தடுப்பூசி இரண்டு   டோஸ்களையும்  செலுத்திக் கொண்டவர்களுக்கு 94 சதவீதம் பேருக்கு  தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய அபாய நிலை ஏற்படவில்லை  என்றும் 77 சதவீதம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் மருத்துவமனைக்கு செல்லாமல் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் பெரும் பங்கை ஆற்றிவருவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர் .

 தமிழ் நாட்டில்  கொரோனா  முதல் அலை பாதிப்பைக் காட்டிலும் இரண்டாம் அலையின் பாதிப்பு  மிக வேகமாக புதிய தொற்று பாதிப்புகள் உருவாகிவந்தன  .புதிய தொற்றுகள் மட்டுமல்லாமல்  இறப்புகளும் அதிகரித்து வந்தன குறிப்பாக, இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடினர். இதற்கிடையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாப்பதுடன் தீவிர சிகிச்சை ஐசியூ அளிக்க வேண்டிய அபாய நிலைக்கு செல்வதை தடுப்பதிலும் கொரோனா  தடுப்பூசிக்கு பெரும்பங்கு இருப்பது சிஎம்சி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மேத்யூ உள்ளிட்ட 5 மருத்துவர்கள் நடத்திய இந்த ஆய்வில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு 94 சதவீதம் பேருக்கு  தீவிர சிகிச்சை  (ஐசியு) அளிக்க வேண்டிய அபாய நிலை ஏற்படவில்லை என்றும் 77 சதவீதம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் மருத்துவமனைக்கு செல்லாமல் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் பெரும் பங்கை ஆற்றிவருவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர் .     

வேலூர் சிஎம்சி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பீட்டர் ஜான்விக்டர், ஜாய் , ஹேமா பால், பிரசாத் மேத்யூ, மாலதி முருகேசன்,  உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தயாரித்துள்ள ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர் .இதில்  தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி  மருத்துவமனையின் (CMC )  செய்திதொடர்பு அதிகாரி துரை ஜாஸ்பர்,  வேலூர் சிஎம்சி மருத்துவமனை 2500 கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை  கொண்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என சுமார் 10,600 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில், 8,991 பேருக்கு கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . இவர்களில் 93.4 சதவீதம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 6.6 சதவீதம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது .

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை சுமார் 1,300 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சில நாட்களில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களைக் காட்டிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 95 சதவீதம் பேரை தொற்றில் இருந்து பாதுகாப்பது தெரியவந்துள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை பாதுகாப்பதில் 61 சதவீதமும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொணடவர்களை பாதுகாப்பதில் 65 சதவீத மாகவும் இருக்கிறது.


தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

மேலும், ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் பாதுகாப்பதில் 70 சதவீதம், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிப்பதில் இருந்து பாதுகாப்பதில் 94 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்வதில் இருந்து பாதுகாப்பதில் 95 சதவீதமாக இருக்கிறது. இரண்டுடோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மருத்துவ மனைக்கு செல்லாமல் பாது காப்பதில் 77 சதவீதமும், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையை தவிர்த்ததில் 92 சதவீதமும், ஐசியு சிகிச் சையை தவிர்ப்பதில் 94 சதவீதம் பங்களிப்பது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் கொரோனா தடுப்பூசி தொற்றில் இருந்து பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக ஆய்வு செய்த மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Embed widget