மேலும் அறிய

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

கொரோனா தடுப்பூசி இரண்டு   டோஸ்களையும்  செலுத்திக் கொண்டவர்களுக்கு 94 சதவீதம் பேருக்கு  தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய அபாய நிலை ஏற்படவில்லை  என்றும் 77 சதவீதம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் மருத்துவமனைக்கு செல்லாமல் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் பெரும் பங்கை ஆற்றிவருவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர் .

 தமிழ் நாட்டில்  கொரோனா  முதல் அலை பாதிப்பைக் காட்டிலும் இரண்டாம் அலையின் பாதிப்பு  மிக வேகமாக புதிய தொற்று பாதிப்புகள் உருவாகிவந்தன  .புதிய தொற்றுகள் மட்டுமல்லாமல்  இறப்புகளும் அதிகரித்து வந்தன குறிப்பாக, இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடினர். இதற்கிடையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாப்பதுடன் தீவிர சிகிச்சை ஐசியூ அளிக்க வேண்டிய அபாய நிலைக்கு செல்வதை தடுப்பதிலும் கொரோனா  தடுப்பூசிக்கு பெரும்பங்கு இருப்பது சிஎம்சி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மேத்யூ உள்ளிட்ட 5 மருத்துவர்கள் நடத்திய இந்த ஆய்வில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு 94 சதவீதம் பேருக்கு  தீவிர சிகிச்சை  (ஐசியு) அளிக்க வேண்டிய அபாய நிலை ஏற்படவில்லை என்றும் 77 சதவீதம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் மருத்துவமனைக்கு செல்லாமல் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் பெரும் பங்கை ஆற்றிவருவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர் .     

வேலூர் சிஎம்சி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பீட்டர் ஜான்விக்டர், ஜாய் , ஹேமா பால், பிரசாத் மேத்யூ, மாலதி முருகேசன்,  உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தயாரித்துள்ள ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர் .இதில்  தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி  மருத்துவமனையின் (CMC )  செய்திதொடர்பு அதிகாரி துரை ஜாஸ்பர்,  வேலூர் சிஎம்சி மருத்துவமனை 2500 கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை  கொண்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என சுமார் 10,600 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில், 8,991 பேருக்கு கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . இவர்களில் 93.4 சதவீதம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 6.6 சதவீதம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது .

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை சுமார் 1,300 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சில நாட்களில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களைக் காட்டிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 95 சதவீதம் பேரை தொற்றில் இருந்து பாதுகாப்பது தெரியவந்துள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை பாதுகாப்பதில் 61 சதவீதமும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொணடவர்களை பாதுகாப்பதில் 65 சதவீத மாகவும் இருக்கிறது.


தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவு - வேலூர் சிஎம்சி ஆய்வறிக்கை

மேலும், ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் பாதுகாப்பதில் 70 சதவீதம், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிப்பதில் இருந்து பாதுகாப்பதில் 94 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்வதில் இருந்து பாதுகாப்பதில் 95 சதவீதமாக இருக்கிறது. இரண்டுடோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மருத்துவ மனைக்கு செல்லாமல் பாது காப்பதில் 77 சதவீதமும், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையை தவிர்த்ததில் 92 சதவீதமும், ஐசியு சிகிச் சையை தவிர்ப்பதில் 94 சதவீதம் பங்களிப்பது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் கொரோனா தடுப்பூசி தொற்றில் இருந்து பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக ஆய்வு செய்த மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Embed widget