மேலும் அறிய

India Corona Cases: அச்சுறுத்தும் கொரோனா.. அவசரமாக பிரதமர் மோடி மேற்கொண்ட உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம்... முழு விவரம்!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மதிப்பாய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது

நேற்று இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், நிலைமையை கட்டுக்குள் வைப்பது மற்றும் பொது சுகாதார துறை எந்த அளவுக்கு தயாராக உள்ளது என்பதை மதிப்பாய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 20 முக்கிய முருந்துகள், 12 இதர மருந்துகள், 8 இடையக மருந்துகள் மற்றும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மருந்தின் கையிருப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பிரதமரிடன் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டில் கடந்த சில நாட்களாக எச்1என்1 மற்றும் எச்3என்2 வைரஸ் மூலம் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அது  குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வதிமுறைகளை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கேட்டு அறிந்தார்.

மேலும் முதியவர்கள், இணை நோயாளிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.   இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா வைரஸ்  மற்றும் அடினோவைரஸ் ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மாநிலங்களில் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.  

கொரோனா பெருந்தொற்று தற்போது இல்லை என்றும், நாட்டில் கொரோனா பரவல் குறித்து தொடர் கண்காணிப்பு தேவையில்லை என்றும் பிரதமர்  மோடி எடுத்துரைத்தார்.  மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 1,134 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதே சமயம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக உள்ளது. சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா  மாநிலத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.  

தினசரி தொற்று பாதிப்பு 1.09 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, வாராந்திர தொற்று பாதிப்பு 0.98 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,98,118) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் விகிதம் 98.79 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,831 பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 92.05 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,60,279 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget