மேலும் அறிய

Corona: சீனாவில் இருந்து சேலம் திரும்பிய ஜவுளி தொழிலதிபருக்கு கொரோனா உறுதி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று அனைத்து உலக நாடுகளிலும் பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பி.எஃப் 7 வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், சீனா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று கோவை விமான நிலையத்திற்கு மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வந்த சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாதிரியானது பி.எஃப் 7 வகையானதா என்பதைக் கண்டறிய மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Corona: சீனாவில் இருந்து சேலம் திரும்பிய ஜவுளி தொழிலதிபருக்கு கொரோனா உறுதி

ஜவுளி தொழிலதிபர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதால் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் அறிகுறியுடன் இல்லை. இருப்பினும் அனைவரும் மருத்துவத் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த மருத்துவக் குழு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலதிபர் வசிக்கும் வீடு அருகில் உள்ள பகுதியில் கோவிட் நோய் அறிகுறிகள் கண்ட நபர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளான நபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு நோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ஜவுளி தொழிலதிபர் குடும்ப உறுப்பினர்களுக்குக் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிராமம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் நலக்கல்வி அளிக்கப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Corona: சீனாவில் இருந்து சேலம் திரும்பிய ஜவுளி தொழிலதிபருக்கு கொரோனா உறுதி

மேலும், சேலம் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர கொரோனா பரிசோதனை நிலையத்தில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்பும் மக்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டு, பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். தற்போது வரத் தொடங்கியுள்ள கொரோனா ஆனது அதிகம் பரவும் தன்மையைக் கொண்டிருந்தாலும், உயிருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவேளையை போன்றவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Embed widget