மேலும் அறிய

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் கர்ப்பிணிப் பெண்கள், அண்மையில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு 7.6 மடங்கு கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 4 ஆயிரம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைப்பேறுக்கு பிந்தைய கட்டத்தில் உள்ள பெண்களின் விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்கிறார், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மறு உற்பத்தி நலவியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் கீதாஞ்சலி சச்தேவா. 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் ஆகியோருக்கு முதல் அலையின்போது 14.2 சதவீதம் தொற்று பாதிப்பு பதிவானது. அதுவே இரண்டாம் அலையின்போது 28.7 சதவீதமாக அதிகரித்தது. தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதைப் பார்த்தால், முதல் அலையில் 0.75 சதவீதமாக இருந்தது, இரண்டாம் அலையின்போது 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.  


கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா தொற்றும் அதையொட்டி ஏற்பட்ட இறப்புகளும் அதிகரித்துள்ளதற்கு உரிய காரணம் இன்னும் தெளிவாகவில்லை. கொரோனாவின் உருமாற்றம் அடைந்த புதுப்புது கிருமிகள் நோயின் தீவிர பாதிப்பு அதிகரிப்புக்கு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் எதையும் உறுதியாகக் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம். ஏனென்றால், கிருமியின் மரபணுவைப் பிரித்தரியும் பணி இன்னும் முடிவடையவில்லை. அதன் முடிவு வந்த பிறகே காரணம் தெரியவரும்” என்றும் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர் கீதாஞ்சலி கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி கடைசி வரையிலான முதல் அலைக்கட்டத்திலும், இரண்டாம் அலையில் கடந்த பிப்ரவரி முதல் தேதியிலிருந்து சென்ற மாதம் 14-ஆம் தேதி வரையிலும் மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பொதுவாகவே, இரண்டாம் அலையில் கர்ப்பிணிகளுக்கு முதல் அலையைவிட கூடுதலான பாதிப்பு என்பதைப் பார்க்க முடிகிறது என்கின்றனர்.


கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

சாகேத் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மகப்பேறியியல் மருத்துவர் அனுராதா கபூர், இந்த முறை ஏராளமான பெண்கள் தொற்றால் ஏற்பட்டு, மோசமாக பாதிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார். ”கடந்த முறை கொரோனா பாதிப்பு தொடங்கியபோது, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு கர்ப்பிணிகளைப் பாதிக்காது எனும் அடிப்படையில் வழிகாட்டல் அளித்தது. ஆனால் இந்த முறை அதற்கு நேர்மாறாக வழிகாட்டல் நெறிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பாதிப்புகளில் நோயாளிகளின் நுரையீரல் மோசமான நிலையை அடைந்திருந்தன. எந்த அளவுக்கு என்றால் சிகிச்சை செய்யவே முடியாதபடி கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன” என்றும் அனுராதா கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு தொடங்கிய கடந்த ஆண்டிலிருந்து இப்போது வரை கர்ப்பிணிகள், அண்மையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் 2 சதவீத அளவுக்கு உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதில், பெரும்பாலான இறப்புகள் கொரோனாவால் உண்டான விஷக்காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் ஏற்பட்டவை என்றும் கூறியுள்ளது.

மேலும் படிக்க : Woman IPS Officers | இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்? என்ன செய்தார்கள்?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget