மேலும் அறிய

Cancer Unknown Facts: குணமடைந்த பிறகும் புற்றுநோய் தாக்குவது ஏன்? முற்றிலும் ஒழிக்க முடியாதா? தீர்வு தான் என்ன?

Cancer Unknown Facts: சிகிச்சைக்குப் பின் குணமடைந்த பிறகும் புற்றுநோய் தாக்குவது ஏன்? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Cancer Unknown Facts: புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க முடியுமா? முடியாதா? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் பாதிப்பு:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தவர்களும், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நோய்க்கு இரையாகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களின் மனதில் அடிக்கடி எழும் கேள்வி என்னவென்றால், நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவே முடியாதா? மீண்டும் புற்றுநோய் வரும் அபாயத்திற்கான காரணம் என்ன? மீண்டு வந்த பிறகு மீண்டும் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க தனது வாழ்க்கை முறையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? என்பவையே ஆகும். 

யாருக்கு மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்?

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் அந்த பாதிப்பு வந்தால், அதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், முதலில் நோயாளிக்கு எந்த வகையான புற்றுநோய் இருந்தது என்பதை மருத்துவர்கள் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். எந்த கட்டத்தில் நோயாளி முழுமையாக புற்றுநோயால் குணமடைந்தார்? பொதுவாக, நிலை 3 மற்றும் 4 இல் புற்றுநோயிலிருந்து மீண்டு வரும் நோயாளிகள் மீண்டும் புற்றுநோயைப் பெறுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

இதையும் படியுங்கள்: Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?

எந்த உறுப்புகளை மீண்டும் தாக்கலாம்?

நோயாளிக்கு முன்பு எந்த வகையான புற்றுநோய் இருந்தது, எந்த இடத்தில் இருந்தது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில்களைக் கண்டறிந்த பின்னரே மருத்துவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியும். பொதுவாக, கல்லீரல், வயிறு போன்ற புற்றுநோய்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில், மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. அதே சமயம், ஒரு நோயாளிக்கு மீண்டும் புற்றுநோய் வருகிறதா என்பது, அவர் முன்பு எந்த வகையான புற்றுநோயை கொண்டிருந்தார் மற்றும் அது எங்கே இருந்தது? என்பதை பொறுத்ததே ஆகும்.

புற்றுநோய் ஏன் மீண்டும் தாக்குகிறது?

பொதுவாக ஒருவர் புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது, ​​சிகிச்சையின் போது சில செல்கள் செயலிழந்து விடுகின்றன. ஆனால், அந்த செல்கள் முழுமையாக இறப்பதில்லை என்பதால்,  அது பின்னர் மீண்டும் புற்றுநோயை உருவாக்குகிறது.

மீண்டும் புற்றுநோய் வரும் அபாயத்தை எப்படி குறைக்கலாம்?

மீண்டும் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்க, குணமடைந்தவர்  தனது வாழ்க்கைமுறையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் பெண்கள் தொடர்ந்து யோகா செய்ய வேண்டும் என்பது பல மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனால், அவர்களுக்கு மீண்டும் இந்நோய் வரும் அபாயம் இல்லை. புற்றுநோயைத் தோற்கடித்த பிறகு, நோயாளி தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது தவிர, உணவுப் பழக்கவழக்கங்களிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த நோயாளிகள் தங்கள் உணவில் பச்சை காய்கறிகளை சேர்க்க வேண்டும். இது அந்த நபரின் டிஎன்ஏவை பலப்படுத்துவதோடு, மீண்டும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.

எந்த பழக்கங்களை கைவிடுவது மிகவும் அவசியம்?

புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு, நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், உடல்நலனுக்கு கெடுதல் ஏற்படுத்தும் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.  இவற்றில், மது மற்றும் சிகரெட் அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் புற்றுநோயில் இருந்து மீண்ட பிறகு இதுபோன்ற பழக்கங்களை கடைபிடித்தால், புற்றுநோய் மீண்டும் தாக்கும். புற்றுநோயில் இருந்து விடுபட்ட பிறகு, நோயாளி மன அழுத்தத்தைத் தவிர்த்து, போதுமான தூக்கத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கம் இல்லாததால், மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்று மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மீண்டும் புற்றுநோய் வந்த பிறகு சிகிச்சை பெறலாமா?

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒரு நோயாளிக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கினால், சிகிச்சையளிப்பது சற்று கடினமாகிவிடும் என்பதை மறுக்க முடியாது. உண்மையில், புற்றுநோய் மீண்டும் தாக்கும் போது, ​​அது முன்பை விட ஆக்ரோஷமாக இருக்கும்.  கீமோதெரபி தவிர, நோயாளிக்கு இலக்கு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் கார்பஸ் செல் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க முடியும். புற்றுநோயிலிருந்து மீண்டு ஆறு மாத இடைவெளியிலேயே மீண்டும் புற்றுநோய் தாக்கினால், சிகிச்சை கடினமாக இருக்கும்.

என்ன செய்வது மிகவும் முக்கியமானது?

ஒருமுறை புற்றுநோயால் குணமடைந்துவிட்டால், பலமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம் ரத்த பரிசோதனை. அதே நேரத்தில், சில புற்றுநோய்களுக்கு அறிகுறிகளே தெரிவதில்லை. இதன் காரணமாக அந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு, புற்றுநோய் நோயாளியை மீண்டும் சூழ்ந்து கொள்கிறது. சில நேரங்களில் வேறு சில நோய்களால் மீண்டும் புற்றுநோய் தாக்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து நோயாளிகளும் தங்கள் மருத்துவ பரிசோதனைகளை அவ்வப்போது செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொறுப்புத் துறப்பு: செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள சில தகவல்கள் ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவொரு பரிந்துரையையும் செயல்படுத்துவதற்கு முன், நீங்கள் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுக வேண்டும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Embed widget