மேலும் அறிய

India Defence: பாகிஸ்தான, சீனா எல்லையில் இந்தியா எந்த ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது? இவ்வளவு சக்தி வாய்ந்ததா?

India Defence: அண்டை நாடுகளான பாகிஸ்தான, சீனா எல்லையில் இந்தியா எந்த ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது என்ற தகவலை இந்த தொகுப்பில் அறியலாம்.

India Defence: அண்டை நாடுகளான பாகிஸ்தான, சீனா எல்லையில், இந்தியா நிலைநிறுத்தியுள்ள ஏவுகணைகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள்:

இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா இடங்களிலும் எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான பதற்றம் காரணமாக, இந்த இரு நாடுகளின் எல்லைகளில் இந்திய ராணுவம் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது. நமது ராணுவம் உலகின் நான்காவது சக்திவாய்ந்த ராணுவம். ஆனால், இந்திய ராணுவம் இதுவரை எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பதற்கு வரலாறு சாட்சி. ஆனால் எந்த நாடும் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டால் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கிறது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நமது உறவு சுமூகமாக இருந்தது இல்லை. இதற்கு மிகப்பெரிய காரணம் பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் சதி செய்வதே. ஆனால் இந்த இரு நாடுகளையும் சமாளிக்க இந்திய ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது என்பதும், இந்திய ராணுவத்தின் ஏவுகணைகள் எல்லையில் நிலைநிறுத்தப்படுவதும் உங்களுக்குத் தெரியுமா? இந்த இரண்டு எல்லைகளிலும் இந்தியா எந்தெந்த ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது என்பது தெரியுமா?

சீன எல்லை நிலவரம்:

கடந்த சில ஆண்டுகளாக சீன எல்லையில் இந்திய ராணுவம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக ராணுவம் கூடுதல் பாதுகாப்பு படையினருடன் ஏவுகணைகளையும் குவித்துள்ளது. இந்திய ராணுவம் சிக்கிமில் 17 ஆயிரம் அடி உயரத்தில், சீன எல்லைக்கு மிக அருகில் நவீன கான்குவர்ஸ் டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணை சீன டாங்கிகளை அழிக்கும் திறன் கொண்டது. வடக்கு எல்லையில், கே9 வஜ்ரா, தனுஷ், ஷரங் உள்ளிட்ட 155 மிமீ துப்பாக்கி அமைப்புகளை ராணுவம் அதிக அளவில் நிறுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் எல்லை நிலவரம்:

பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ முயற்சிக்கிறது. எனவே, எல்லைப் பாதுகாப்பு அமைச்சகம் எப்போதும் பாகிஸ்தான் எல்லைகளில் கூடுதல் படைகளை நிலைநிறுத்துகிறது மற்றும் பல ஏவுகணைகளை இங்கு நிலைநிறுத்தியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் எல்லையில் தானியங்கி ஆயுதங்களுடன் பிரலே ஏவுகணைகளையும் ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. பிரலே ஏவுகணையின் வரம்பு 150 முதல் 500 கி.மீ. எனினும் இது 2000 km/hr ஆக அதிகரிக்கலாம். 

பாகிஸ்தான், சீனாவை அச்சுறுத்தும் பிரம்மோஸ் ஏவுகணை:

இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையின் அடுத்த பதிப்பை அதாவது பிரம்மோஸ்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணையைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது உலகின் அதிவேக ஏவுகணையாக இருக்கும். அதன் ரேஞ்ச் 1,500 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் மற்றும் அதன் வேகம் ஒலியின் வேகத்தை விட 7-8 மடங்கு அதிகமாக இருக்கும், அதாவது மணிக்கு சுமார் 9,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். இதுமட்டுமின்றி, கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், விமானம் மற்றும் தரை அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் மூலம் பிரம்மோஸ்-2 விண்ணில் செலுத்தப்படலாம். இதன் எல்லை டெல்லி முதல் இஸ்லாமாபாத் வரை இருக்கும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget