மேலும் அறிய

”வித்யாசாகரால் அவமானப்படுத்தப்பட்டேன்! இந்த சூழலிதான் அந்த பாட்டு” - யுகபாரதி

காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர்.

தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கவிஞர் , திரைப்பாடலாசிரியர் யுகபாரதி. கவிதைகள் , கட்டுரைகள் என இலக்கிய துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞன். இவர் முதன் முதலில் எழுதிய பாடல் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘ பாடல். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @myinnisaimazhaai

அவமானப்படுத்தப்பட்ட யுகபாரதி :

இந்த சூழலில்தான் இயக்குநர் லிங்குசாமி , யுகபாரதியை அனுகியிருக்கிறார். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது . அதே போல நீங்கள் வேறு ஒரு பாடல் எழுத வேண்டும் என கூறி வித்யாசாகரிடம் அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது வித்யாசாகரிடம் விருது பெற்ற இரண்டு கவிதை தொகுப்புகளை கொடுத்தாராம். அதனை இடது கையால் வாங்கி ஒரு மூலையில் தூக்கி போட்டதாக சொல்கிறார் யுகபாரதி. மேலும் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் தனக்கு தெரியாது என்பது போலவே நடந்துக்கொண்டாராம் வித்யாசாகர். அப்போது இவரா பாடலாசிரியர், காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா காதல் கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர். உடனே லிங்குசாமி இவர் எனக்கு லக்கி சார்ம் சார் . அதனால இவரே எழுதட்டும் என்றாராம் . நமது திறமையை மதித்து அழைத்தார் என நினைத்தால் லக்கி என கூறுகிறாரே என வருத்தப்பட்டிருக்கிறார் யுகபாரதி.


”வித்யாசாகரால் அவமானப்படுத்தப்பட்டேன்! இந்த சூழலிதான் அந்த பாட்டு”  - யுகபாரதி

வித்யாசாகர் - யுகபாரதி வாக்குவாதம் :

லவ் லெட்டர் கொடுப்பது போல ஸ்விட்சிவேஷன். ஆனால் அன்புள்ள என ஆரமிக்கக்கூடாது என வித்யாசாகர் சொல்ல , யுகபாரதி நிறைய வார்த்தைகளை முயற்சித்து பார்த்திருக்கிறார். எது சொன்னாலும் வித்யாசாகர் முரணாக பேசவே , இவரை மாற்றுங்கள் அல்லது என்னை மாற்றுங்கள் என வித்யாசாகர் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று , இரவு முழுவதும் யோசித்திருக்கிறார். அப்போது அழைத்த லிங்குசாமி அவர் காரணமில்லாமல் எதுவும் பேசமாட்டார் . சற்று யோசித்து பாருங்கள்! வித்தியாசமாக செய்யுங்கள் என்றாராம். அப்போது நண்பர் ஒருவர் யுகபாரதியை அழைக்கவே “எப்படி இருக்க ?” என கேட்க “ ஏதோ இருக்கிறேன் என கூறியிருக்கிறார். முதல் வரியை சித்தர் பாடலில் இருந்த வரிகள் மூலம் இன்ஸ்பெயர் ஆகி எழுதியவர். நண்பரின் அழைப்பால் “ ஏதோ சௌக்கியம் பராவியில்லை” என்ற வரிகளை இணைத்திருக்கிறார். அடுத்தடுத்த வரிகள் அனைத்தும் அந்த இரவில் நான் எதிர்கொண்ட மனநிலைதானே தவிர, அது காதலுக்காக எழுதவில்லை என்கிறார் யுகபாரதி.

பாராட்டிய வித்யாசாகர் :

அதன் பிறகு அடுத்த நாள் பாடலை கொண்டு போய் காட்டியது. வித்யாசாகர் யுகபாரதியை அழைத்து . நேற்று நான் அப்படி நடந்துக்கொள்ளாவிட்டால் இப்படி புதுமையாக எழுதியிருப்பீர்களா? இனி நான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் ஒரு பாடல் உங்களுடையதுதான் என்றாராம். வித்யாசாகர் இசையில் 300 க்கும் மேற்பட்ட பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 04:18 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் -  ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் - ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா..  ”பாடல் வரியில் பட தலைப்புகள்..  ஆதங்கப்பட்ட வைரமுத்து
Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா.. ”பாடல் வரியில் பட தலைப்புகள்.. ஆதங்கப்பட்ட வைரமுத்து
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் -  ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் - ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா..  ”பாடல் வரியில் பட தலைப்புகள்..  ஆதங்கப்பட்ட வைரமுத்து
Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா.. ”பாடல் வரியில் பட தலைப்புகள்.. ஆதங்கப்பட்ட வைரமுத்து
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
Tata Harrier EV: கிங்குடா..! இந்திய கார்களில் இதுவரை இல்லாத அம்சங்கள் - சம்மன் மோட், ஹாரியரில் டாடா சம்பவம்
Tata Harrier EV: கிங்குடா..! இந்திய கார்களில் இதுவரை இல்லாத அம்சங்கள் - சம்மன் மோட், ஹாரியரில் டாடா சம்பவம்
EPS ADMK: அடிச்சு தூக்கும் பாஜக, மதிக்காத அமித் ஷா? அதிமுகவை காப்பாற்றுவாரா? விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?
EPS ADMK: அடிச்சு தூக்கும் பாஜக, மதிக்காத அமித் ஷா? அதிமுகவை காப்பாற்றுவாரா? விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?
DMK Slams Amit Shah: ”தமிழர்களை கேவலப்படுத்திய மோடி” அமித் ஷா என்னமா உழைக்கிறாரு - திமுக தடாலடி அட்டாக்
DMK Slams Amit Shah: ”தமிழர்களை கேவலப்படுத்திய மோடி” அமித் ஷா என்னமா உழைக்கிறாரு - திமுக தடாலடி அட்டாக்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
Embed widget