மேலும் அறிய

”வித்யாசாகரால் அவமானப்படுத்தப்பட்டேன்! இந்த சூழலிதான் அந்த பாட்டு” - யுகபாரதி

காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர்.

தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கவிஞர் , திரைப்பாடலாசிரியர் யுகபாரதி. கவிதைகள் , கட்டுரைகள் என இலக்கிய துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞன். இவர் முதன் முதலில் எழுதிய பாடல் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘ பாடல். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @myinnisaimazhaai

அவமானப்படுத்தப்பட்ட யுகபாரதி :

இந்த சூழலில்தான் இயக்குநர் லிங்குசாமி , யுகபாரதியை அனுகியிருக்கிறார். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது . அதே போல நீங்கள் வேறு ஒரு பாடல் எழுத வேண்டும் என கூறி வித்யாசாகரிடம் அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது வித்யாசாகரிடம் விருது பெற்ற இரண்டு கவிதை தொகுப்புகளை கொடுத்தாராம். அதனை இடது கையால் வாங்கி ஒரு மூலையில் தூக்கி போட்டதாக சொல்கிறார் யுகபாரதி. மேலும் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் தனக்கு தெரியாது என்பது போலவே நடந்துக்கொண்டாராம் வித்யாசாகர். அப்போது இவரா பாடலாசிரியர், காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா காதல் கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர். உடனே லிங்குசாமி இவர் எனக்கு லக்கி சார்ம் சார் . அதனால இவரே எழுதட்டும் என்றாராம் . நமது திறமையை மதித்து அழைத்தார் என நினைத்தால் லக்கி என கூறுகிறாரே என வருத்தப்பட்டிருக்கிறார் யுகபாரதி.


”வித்யாசாகரால் அவமானப்படுத்தப்பட்டேன்! இந்த சூழலிதான் அந்த பாட்டு” - யுகபாரதி

வித்யாசாகர் - யுகபாரதி வாக்குவாதம் :

லவ் லெட்டர் கொடுப்பது போல ஸ்விட்சிவேஷன். ஆனால் அன்புள்ள என ஆரமிக்கக்கூடாது என வித்யாசாகர் சொல்ல , யுகபாரதி நிறைய வார்த்தைகளை முயற்சித்து பார்த்திருக்கிறார். எது சொன்னாலும் வித்யாசாகர் முரணாக பேசவே , இவரை மாற்றுங்கள் அல்லது என்னை மாற்றுங்கள் என வித்யாசாகர் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று , இரவு முழுவதும் யோசித்திருக்கிறார். அப்போது அழைத்த லிங்குசாமி அவர் காரணமில்லாமல் எதுவும் பேசமாட்டார் . சற்று யோசித்து பாருங்கள்! வித்தியாசமாக செய்யுங்கள் என்றாராம். அப்போது நண்பர் ஒருவர் யுகபாரதியை அழைக்கவே “எப்படி இருக்க ?” என கேட்க “ ஏதோ இருக்கிறேன் என கூறியிருக்கிறார். முதல் வரியை சித்தர் பாடலில் இருந்த வரிகள் மூலம் இன்ஸ்பெயர் ஆகி எழுதியவர். நண்பரின் அழைப்பால் “ ஏதோ சௌக்கியம் பராவியில்லை” என்ற வரிகளை இணைத்திருக்கிறார். அடுத்தடுத்த வரிகள் அனைத்தும் அந்த இரவில் நான் எதிர்கொண்ட மனநிலைதானே தவிர, அது காதலுக்காக எழுதவில்லை என்கிறார் யுகபாரதி.

பாராட்டிய வித்யாசாகர் :

அதன் பிறகு அடுத்த நாள் பாடலை கொண்டு போய் காட்டியது. வித்யாசாகர் யுகபாரதியை அழைத்து . நேற்று நான் அப்படி நடந்துக்கொள்ளாவிட்டால் இப்படி புதுமையாக எழுதியிருப்பீர்களா? இனி நான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் ஒரு பாடல் உங்களுடையதுதான் என்றாராம். வித்யாசாகர் இசையில் 300 க்கும் மேற்பட்ட பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget