மேலும் அறிய

‛40 கல்யாணம் கூட பண்ணுவேன்...’ -வனிதா: ‛மொய்யோட வாங்க...’ -பவர் ஸ்டார்! ஒரே மேடையில் பரபரப்பு பேட்டி!

வனிதா-பவர் ஸ்டார் திருமண போட்டோ வெளியான நிலையில், அவர்கள் இவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பதிலளித்தனர்.

பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார், தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது , யூடியூப் சேனலில் ஆக்டிவாக வீடியோ போடுவது போன்றவற்றை செய்து வருகிறார். இந்நிலையில், திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் திருமணம் செய்து கொண்டது போல அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனதோடு வாழ்த்துகளையும் பதிவு செய்தனர்.

இது ரியல் படமா ரீல் படமா என்பது வனிதா தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்பதால், நெட்டிசன்கள் குழப்பதில் உள்ளனர். அதே நேரத்தில் அவர் பவர் ஸ்டாரை மணந்திருக்கலாம் என்று அவரது பதிவிலேயே ரசிகர்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும்  வனிதா விஜயகுமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி, இன்று, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது பிக்கப் டிராப் என்ற படத்தின் அறிமுக விழா என்பது தெரியவந்தது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த வனிதா, “ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் யாரும் தவறாக பேசுவதில்லை.. ஆனால் நான் வெளிப்படையாகதான் செய்கிறேன். ஆனால் தவறாக எழுதுகிறார்கள். நான் 40 திருமணம் கூட செய்வேன். எனக்கு அச்சம் இல்லை. ஆனால் இதுபோல தவறாக பேசுவதால்தான் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதோடு சர்ச்சை நிற்காமல், அதனை தொடர்ந்து பேசிய பவர்ஸ்டார், “இன்னும் காலம் இருக்கின்றது, திருமணம் நடைபெற வாய்ப்பிருக்கின்றது. நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.அடுத்து முறை பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரும்போது, வருபவர்கள் மொய் கவர் எடுத்து வரவும்” என நக்கலாக பேசியுள்ளார். வனிதா மற்றும் ஸ்ரீனிவாசனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சர்ச்சையை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இவர் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணம் முறிந்துவிட ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. அந்த சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடே எதிரொலித்தது. வனிதாவால் அந்த எபிஸோட் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. செட்டுக்கே போலீஸார் தேடிவர பரபரப்பாக பேசப்பட்டார் வனிதா.

சில காலம் வனிதா பற்றி சர்ச்சை ஏதும் எழாமல் இருந்தது. அப்போதுதான் அவர் தனது மூன்றாவது திருமண அறிவிப்பை வெளியிட்டார். பீட்டர்பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் நடந்தது. மகள்கள் முன்னிலையில் அவர் செய்துகொண்ட திருமணம் முற்போக்கானது என்று சிலரும், வளர்ந்த பிள்ளைகள் முன் இப்படியா என கலாச்சார காவல் கருத்துகளோடு சிலரும் வாதிட்டுவந்தனர்.
 
ஆனால், அந்தத் திருமணமும் நான்கே மாதங்களில் கசந்து முறிந்தது. பீட்டர்பாலை வனிதா அடித்து விரட்டினார் என்று பரபரப்பு செய்திகள் பரவின. பீட்டர்பாலின் மனைவியின் நிலையை வனிதா உணர்ந்து சோகத்தைப் பகிர்ந்த நிகழ்வுகளும் கூட நடந்தன. பீட்டர் பாலைப் பற்றி வனிதா ஒரு உருக்கமான ட்வீட்டை அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
 
இதுகுறித்து வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இன்னும் சிங்கிள்தான். அவைளபிலும் கூட. எனவே யாரும் வதந்திகளைப் பரப்பாதீர்கள், நம்பாதீர்கள் எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இப்போது பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் வெளியாகி இருக்கும் வீடியோ அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget