மேலும் அறிய

‛40 கல்யாணம் கூட பண்ணுவேன்...’ -வனிதா: ‛மொய்யோட வாங்க...’ -பவர் ஸ்டார்! ஒரே மேடையில் பரபரப்பு பேட்டி!

வனிதா-பவர் ஸ்டார் திருமண போட்டோ வெளியான நிலையில், அவர்கள் இவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பதிலளித்தனர்.

பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார், தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது , யூடியூப் சேனலில் ஆக்டிவாக வீடியோ போடுவது போன்றவற்றை செய்து வருகிறார். இந்நிலையில், திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் திருமணம் செய்து கொண்டது போல அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனதோடு வாழ்த்துகளையும் பதிவு செய்தனர்.

இது ரியல் படமா ரீல் படமா என்பது வனிதா தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்பதால், நெட்டிசன்கள் குழப்பதில் உள்ளனர். அதே நேரத்தில் அவர் பவர் ஸ்டாரை மணந்திருக்கலாம் என்று அவரது பதிவிலேயே ரசிகர்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும்  வனிதா விஜயகுமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி, இன்று, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது பிக்கப் டிராப் என்ற படத்தின் அறிமுக விழா என்பது தெரியவந்தது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த வனிதா, “ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் யாரும் தவறாக பேசுவதில்லை.. ஆனால் நான் வெளிப்படையாகதான் செய்கிறேன். ஆனால் தவறாக எழுதுகிறார்கள். நான் 40 திருமணம் கூட செய்வேன். எனக்கு அச்சம் இல்லை. ஆனால் இதுபோல தவறாக பேசுவதால்தான் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதோடு சர்ச்சை நிற்காமல், அதனை தொடர்ந்து பேசிய பவர்ஸ்டார், “இன்னும் காலம் இருக்கின்றது, திருமணம் நடைபெற வாய்ப்பிருக்கின்றது. நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.அடுத்து முறை பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரும்போது, வருபவர்கள் மொய் கவர் எடுத்து வரவும்” என நக்கலாக பேசியுள்ளார். வனிதா மற்றும் ஸ்ரீனிவாசனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சர்ச்சையை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இவர் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணம் முறிந்துவிட ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. அந்த சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடே எதிரொலித்தது. வனிதாவால் அந்த எபிஸோட் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. செட்டுக்கே போலீஸார் தேடிவர பரபரப்பாக பேசப்பட்டார் வனிதா.

சில காலம் வனிதா பற்றி சர்ச்சை ஏதும் எழாமல் இருந்தது. அப்போதுதான் அவர் தனது மூன்றாவது திருமண அறிவிப்பை வெளியிட்டார். பீட்டர்பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் நடந்தது. மகள்கள் முன்னிலையில் அவர் செய்துகொண்ட திருமணம் முற்போக்கானது என்று சிலரும், வளர்ந்த பிள்ளைகள் முன் இப்படியா என கலாச்சார காவல் கருத்துகளோடு சிலரும் வாதிட்டுவந்தனர்.
 
ஆனால், அந்தத் திருமணமும் நான்கே மாதங்களில் கசந்து முறிந்தது. பீட்டர்பாலை வனிதா அடித்து விரட்டினார் என்று பரபரப்பு செய்திகள் பரவின. பீட்டர்பாலின் மனைவியின் நிலையை வனிதா உணர்ந்து சோகத்தைப் பகிர்ந்த நிகழ்வுகளும் கூட நடந்தன. பீட்டர் பாலைப் பற்றி வனிதா ஒரு உருக்கமான ட்வீட்டை அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
 
இதுகுறித்து வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இன்னும் சிங்கிள்தான். அவைளபிலும் கூட. எனவே யாரும் வதந்திகளைப் பரப்பாதீர்கள், நம்பாதீர்கள் எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இப்போது பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் வெளியாகி இருக்கும் வீடியோ அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget