மேலும் அறிய

Roja: ‛சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா...’ அனுபவத்தை இறக்குறோம்... ரோஜாவை மீட்கிறோம்...’ கைகோர்த்த டைகர்-அர்ஜூன் !

இனி கோர்ட் அலறப்போகுதே... என பார்வையாளர்கள் காத்திருக்க, அரசு தரப்பு வழக்கறிஞராக ஜே.எஸ்., என்கிற ஜெயசீலன் வரப்போவதாக மூச்சு முட்ட ஓடி வந்து அர்ஜூனிடம் தகவல் தெரிவிக்கிறார் அவரது உதவியாளர்.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் நல்லது நடப்பது என்பது அத்திவரதர் தரிசனம் போல. என்றாவது நடக்கும். ஆனால் தீமைகள், கெடுதல் எல்லாம் மேஹி போல இரண்டு நிமிடத்தில் தயாராகிவிடும். 3 வருடத்திற்கு பின் இப்போது அர்ஜூன்-ரோஜா முதல் இரவு நடந்தது. யார் கண் பட்டதோ.. ஒரு வாரம் கூட ஆகவில்லை... ரோஜா சிறையில் இருக்கிறார். அதுவும் கொலை வழக்கில். 

முதலிரவு முடித்த கையோடு மறுநாளே டிசி சந்திரகாந்தா கொடுத்த ஆபரேஷனுக்காக ஹனிமூன் பிளான் போட்டு சாக்ஷியை பிடிக்க புறப்பட்ட அர்ஜூனிடம், நானும் வந்தே தீருவேன் என வாண்டடா ஏறிச் சென்ற ரோஜா, வழக்கம் போல ஓவர் ஆக்டிங் செய்து, கொலை கேஸில் சிக்கியுள்ளார். சாக்ஷியை நோக்கி சுடும் போது, அவர் விலகிச் செல்ல, பின்னால் இருந்த ரவுடி மீது தோட்டா பாய்ந்து அவர் பலியானார். ரோஜா சுட்டு தான் அவர் இறந்தார் என்பது தான் பிராது. ஆனால் ரோஜா சுடவில்லை என்று தான் இன்னும் சில வாரங்களிலோ.. சில வருடங்களிலோ... தீர்ப்பு வரப்போகிறது. 

பிரபல வழக்கறிஞர் அர்ஜூன், கைதியான தன் மனைவியை எவ்வாறு மீட்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது, அவரது அத்தை கணவரும், ரோஜாவின் அப்பாவுமான டைகர் மாணிக்கம் அங்கு வருகிறார். ‛அர்ஜூன்... நானும் இந்த வழக்கில் ஆஜராகி ரோஜாவை மீட்போம்...’ என்கிறார். அர்ஜூனுக்கு கடந்த கால நிகழ்வுகளை வைத்து டைகர் மாணிக்கம் மீது டவுட். ஆனால் டைகர் மாணிக்கம், ரைடர் மாணிக்கமாக அர்ஜூனை சமரசம் செய்து சம்மதிக்க வைக்கிறார். ‛என்னோட இத்தனை வருட அனுபவத்தை இறக்கி... ரோஜாவை தூக்க உதவுறேன்..’ என சம்பவ டயலாக்குகளை கூறுகிறார். அதுவரை எதிரும் புதிருமாக இருந்த அர்ஜூன்-டைகர் மாணிக்கம், இப்போது முதன்முறையாக, ‛சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா...’ என்கிற பின்னணியோடு இணைகிறார்கள். 

இனி கோர்ட் அலறப்போகுதே... என பார்வையாளர்கள் காத்திருக்க, அரசு தரப்பு வழக்கறிஞராக ஜே.எஸ்., என்கிற ஜெயசீலன் வரப்போவதாக மூச்சு முட்ட ஓடி வந்து அர்ஜூனிடம் தகவல் தெரிவிக்கிறார் அவரது உதவியாளர். ஒரே அதிர்ச்சி... ஜே.எஸ்., வாதாட போறாரா... என்பது தான் அதிர்ச்சி. ‛யார்டா... இது புது கேரக்டர்... பில்டப் வேறு பயங்கரமா இருக்கே...’ என அந்த ஜே.எஸ்.,யை பார்க்க காத்திருந்தால், பலமான பின்னணியை கடந்து குளோஸ் ஷாட்... பார்த்தால், எம்.ஆர்.வாசு...! காமெடிக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டவர்.

அவரை டெரர் வழக்கறிஞராக நிறுத்தியுள்ளனர். அவரும், நேர்கொண்ட பார்வை அஜித் மாதிரி,  உடல் மொழி காட்டுகிறார். ரோஜாவில் கோர்ட் காட்சிகள் புதிதல்ல. ஆனால், இம்முறை அர்ஜூன்-டைகர் மாணிக்கம் இணைந்து ஜே.எஸ்.,யை துவம்சம் செய்ய போகிறார்கள் என்பதால், நீதிமன்றம் வேறு ரகத்திற்கு மாறப் போகிறது என இயக்குனர் தரப்பு நினைத்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் அதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்பது நமக்கு மட்டும் தானே தெரியும்.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொட

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேர் பணியிட மாற்றம்; 9 இணை இயக்குநர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து அதிரடி
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேர் பணியிட மாற்றம்; 9 இணை இயக்குநர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து அதிரடி
Breaking News LIVE, JULY 16: ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி முன் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆஜர்
Breaking News LIVE, JULY 16: ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி முன் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆஜர்
Usha Chilukuri: இந்திய வம்சாவளியினரான உஷா சிலுகுரி யார்? அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கணவர் தேர்வு
இந்திய வம்சாவளியினரான உஷா சிலுகுரி யார்? அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கணவர் தேர்வு
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rowdy Arrest | கட்டிலுக்கு அடியே பதுங்கு குழி..பயங்கர ஆயுதங்களுடன் ரௌடிகள்! தட்டித்தூக்கிய போலீஸ்Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேர் பணியிட மாற்றம்; 9 இணை இயக்குநர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து அதிரடி
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேர் பணியிட மாற்றம்; 9 இணை இயக்குநர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து அதிரடி
Breaking News LIVE, JULY 16: ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி முன் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆஜர்
Breaking News LIVE, JULY 16: ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி முன் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆஜர்
Usha Chilukuri: இந்திய வம்சாவளியினரான உஷா சிலுகுரி யார்? அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கணவர் தேர்வு
இந்திய வம்சாவளியினரான உஷா சிலுகுரி யார்? அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கணவர் தேர்வு
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
காவிரி ஆற்றில் வினாடிக்கு 20  ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல் இயக்க தடை
காவிரி ஆற்றில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல் இயக்க தடை
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Embed widget