மேலும் அறிய

வன்மத்தின் உச்சத்தில் தவெக தொண்டர்கள்...ஓவியாவை ஆபாசமாக திட்டி சோசியல் மீடியாவில் குவியும் பதிவுகள்

கரூர் கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்தது குறித்து விஜயை கைது செய்யக் கோரி நடிகை ஓவியா பதிவிட்ட நிலையில் ஓவியாவை தவெக தொண்டர்கள் ஆபாசமாக திட்டி சமூக வலைதளத்தில் தாக்கி வருகிறார்கள்

ஓவியாவை ஆபாசமாக திட்டும் தவெகவினர்

கரூரில் விஜயின் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியிருக்கிறது. இச்சம்பவத்திற்கு காரணமான விஜயை கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஓவியாவை சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் ஆபாச வார்த்தை பேசி தாக்கத் தொடங்கினர். இதனால் ஓவியா தனது பதிவை நீக்கினார். பதிவை நீக்கியபின்னும் ஓவியாவின் முந்தைய பதிவுகளில் ஆபாசமாக கமெண்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர் தவெகவினர். இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஓவியா. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oviya (@happyovi)

விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழப்பு 

கடந்த சனிக்கிழமை இரவு கரூர் வேலுச்சாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர். அந்த நேரத்தில் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலால் பலர் சிக்கினர். அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 82 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

34 மணி நேரத்திற்கு பின் தலைகாட்டிய விஜய்

இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை கிளப்பிய நிலையில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தவெக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் கூட்ட நெரிசல் நடந்த உடனே அங்கிருந்து புறப்பட்ட விஜய், சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்தபடியே அவர் வெளியே வராமல் இருந்த நிலையில் சுமார் 34 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் கிளம்பிய அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை

இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருங்கிணைப்பு ஆணையம், இன்று இரண்டாம் நாளாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்கிறது. மேலும், கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவ விசாரணைக்காக புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget