S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
சென்னை போன்ற நகரங்களுக்கு வரும் மக்கள் இங்கு பல வசதிகளைக் கொண்ட தியேட்டர்களுக்கு செல்வவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அப்படியான நிலையில் திருவான்மியூர் மக்களின் விருப்பமாக திகழ்ந்த S2 தியாகராஜா சினிமா தியேட்டர் மூடப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் பகுதியின் அடையாளமாக திகழ்ந்த S2 தியாகராஜா சினிமா தியேட்டர் மூடப்பட்டது. விரைவில் அந்த தியேட்டர் இடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் சினிமா தியேட்டர்கள்
தமிழ்நாட்டையும், சினிமாவையும் என்றைக்கும் பிரிக்க முடியாத என்ற அளவுக்கு இங்கு வாழும் மக்களின் இரத்த ஓட்டத்தில் தியேட்டர்கள் கலந்திருக்கின்றன. ஒரு காலத்தில் நம்மை சுற்றி இயங்கிய, நாம் பார்த்து பார்த்து ரசித்த பல தியேட்டர்கள் இன்றைக்கு திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களாக மாறி விட்டது. சில தியேட்டர்கள் அப்படியே மூடப்பட்டு சிதிலமடைந்து அப்படியே கிடக்கிறது. அதேசமயம் பல இடங்களிலும் சினிமா தியேட்டர்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. தியேட்டர்களை நிர்வாகம் செய்வதில் அதிகப்படியான செலவு உள்ளிட்டவை காரணமாக அதனை நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல் எழுந்து வருகிறது.
சென்னையில் அடுத்தடுத்து தியேட்டர்கள் மூடல்
இப்படியான நிலையில் சென்னையில் அடுத்தடுத்து தியேட்டர்கள் மூடப்பட்டு வருவது உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு வரும் மக்கள் இங்கு பல வசதிகளைக் கொண்ட தியேட்டர்களுக்கு செல்வவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அப்படியான நிலையில் திருவான்மியூர் மக்களின் விருப்பமாக திகழ்ந்த S2 தியாகராஜா சினிமா தியேட்டர் மூடப்பட்டுள்ளது.
திருவான்மியூரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த தியேட்டர் ஆரம்பத்தில் ஒரு திரை கொண்டு செயல்பட்டு வந்தது. எல்.பி. சாலையில் அமைந்துள்ள இந்த தியேட்டர் உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு ஸ்க்ரீன்கள் கொண்ட தியேட்டராக மாற்றப்பட்டது. எஸ்பிஐ, பிவிஆர் குழுமம் இந்த தியேட்டரை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தது. ஒரு ஸ்க்ரீன் பெரிய அளவிலும், இன்னொர்ஸ் ஸ்க்ரீன் சிறிய அளவிலும் இருந்தது. எனினும் திருவான்மியூர் மட்டுமல்லாது அடையாறு, ஓ.எம்.ஆர்., இசிஆர் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் விருப்பமாகவும் திகழ்ந்தது.
அங்கு வருவது என்ன?
இந்த நிலையில் வும்மிடி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான பிபிசிஎல் நிறுவனம் தியாகராஜா தியேட்டர் குடும்பத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி அந்த இடத்தில் வணிக வளாகம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் விற்பனை நிலையங்கள், திரையரங்கம், அலுவலகங்கள் ஆகியவை இருக்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்ப திட்டமிடப்பட்டு வருகிறதாக பிபிசிஎல் நிர்வாக இயக்குநர் ஆனந்த் வும்மிடி தெரிவித்துள்ளார். ரூ.500 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு பகுதியாக வரும் தியேட்டர் தொடர்ந்து தியாகராஜா குடும்பத்தினரால் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சதுர அடி பரப்பளவில் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறுவனம் சட்டப்பூர்வ அனுமதிகளைக் கோரும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















