மேலும் அறிய

Samantha: உடல்நிலைக்குறைவு காரணமாக பிரபல நடிகை சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..? ரசிகர்கள் கவலை..

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

சமந்தாவிற்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த ஆண்டு தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு முழு வீச்சில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக அவர் செய்த ”ஊ சொல்றிய” பாடல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பட வாய்ப்புகள் வந்தது.

நடிகை சமந்தாவின் யசோதா திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் படம் அபாரம். குறிப்பாக வெளியாகி 10 நாட்களில் யசோதா படம் உலகம் முழுவதும் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யசோதாவின் வெற்றி சமந்தாவிற்கு மகிழ்ச்சியை தந்தாலும் படத்தின் வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு மயோசிடிஸ் என்ற அரிய நோய் உள்ளது. இப்படம் வெளியாவத்ற்கு முன், படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது நேர்காணல் ஒன்றில், தான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், தன் உடல்நிலை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தது குறித்தும் மனமுடைந்து பேசியுள்ளார்.

​​“சில நாள்கள் நல்லபடியாக இருக்கும், சில நாள்கள் மோசமானவையாக இருக்கும். சில நாள்கள் படுக்கையில் இருந்து எழுவதே கடினமாக இருக்கும், சில நாள்கள் போராட வேண்டும் என்று நினைப்பேன். மெல்ல மெல்ல நான் போராட விரும்பும் நாள்கள், நான் பலவீனமாக நினைக்கும் நாட்களை விட அதிகமாகித்தான் வருகிறது” எனத் தெரிவித்தார்.

சமந்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து மனமுடைந்து பேசிய சமந்தா, "இப்போது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. நான் விரைவில் இறக்கப்போவதில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக நிறைய கட்டுரைகளைப் பார்த்தேன். ஆம் இதிலிருந்து குணமாக நேரம் எடுக்கும். நான் சோர்வாக உணர்கிறேன் ஆனால் போராடியே வந்திருக்கிறேன், இதனை எதிர்த்து போராடப் போகிறேன். நான் இவ்வளவு தூரம் போராடி வந்திருக்கேனான்னு தோணுது. ஆனா நான் போராடிதான் ஆகணும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மூன்று மாதங்கள் மிகவும் இருண்ட காலமாக இருந்ததாகக் கூறியுள்ள சமந்தா, தான் அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதாகவும், மருத்துவர்களை தொடர்ந்து அணுகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
“வாழ்க்கையில எல்லாவற்றையும் குறித்து நான் பேசியே வந்திருக்கிறேன். நான் நாகரீகமான உடைகள், அசாதாரணமான போட்டோஷூட் செய்த வாழ்க்கைமுறையை காண்பித்திருக்கும் நிலையில், இந்த க்ளாமர் அல்லாத பக்கத்தையும் காண்பிக்க நினைத்தேன். அனைவருக்கும் நல்ல காலம், மோசமான நேரங்கள் வரும் என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி, பிரபலமாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் மோசமான நேரங்கள் இருக்கும். அதை அனைவரும் அறிவது முக்கியம் ," எனத் தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சாம் தரப்பில் இந்த கருத்து தவறானது என்றும், அவர் ஹைதராபாத்தில் அவரது வீட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget