மேலும் அறிய

The Elephant Whisperers: ஆஸ்கர் விருதுடன் யானைக் காப்பாளர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதி... புகைப்படம் பகிர்ந்த இயக்குநர்!

”இவர்களைப் பிரிந்து 4 மாதங்கள் கடந்துவிட்டது, நான் இப்போது என் குடும்பத்தை அடைந்தது போல் உணர்கிறேன்” என இயக்குநர் பதிவிட்டுள்ளார்.

 ‘தி எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் தோன்றிய யானைக் காப்பாளர்களான பொம்மன், பெள்ளி இருவரும் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சென்ற 13ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் யானைகளைப் பராமரிக்கும் முதுமலையைச் சேர்ந்த தம்பதியைப் பற்றிய ஆவண்ப்படமான  ‘தி எலிஃபேண்ட் விஸ்பரரஸ்’ சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதினைப் பெற்று ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தது.

முதுமலைப் பகுதியில் யானைகளைப் பராமரித்து வரும் பொம்மன் - பெள்ளி இவர்களுக்கும் குட்டி யானை ரகுவுக்கும் இடையேயான அழகிய உறவை இயற்கை எழில்கொஞ்ச படம்பிடிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது முதலே கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வந்த நிலையில், ஆஸ்கருக்கும் பரிந்துரையானது.

தொடர்ந்து கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதினை தி எல்ஃபேண்ட் விஸ்பரர்ஸ் படம் தட்டிச்சென்றது. இந்தப் படத்துக்காக இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவரும் பெற்ற நிலையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

இந்நிலையில், ‘த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் தோன்றியிருந்த தம்பதியான பொம்மன் - பெள்ளி இருவரும் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை முன்னதாக கார்த்திகி கொன்சால்வ்ஸ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”இவர்களைப் பிரிந்து 4 மாதங்கள் கடந்துவிட்டது, நான் இப்போது என் குடும்பத்தை அடைந்தது போல் உணர்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


The Elephant Whisperers: ஆஸ்கர் விருதுடன் யானைக் காப்பாளர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதி... புகைப்படம் பகிர்ந்த இயக்குநர்!

முன்னதாக பொம்மன் - பெள்ளி இருவரும் சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர். இருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்  கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தியும் இருவரையும் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பித்தார். 

மேலும் இந்தத் தம்பதிகளைப் பாராட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானைப்பாகன்கள், அவர்களின் உதவியாளர்களுக்கு ஒரு லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

பழங்குடியினருக்காக குரல் கொடுப்பதற்காக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டதாக கார்த்திகி கொன்சால்வ்ஸ் கூறிய நிலையில், முன்னதாக அவர் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆஸ்கர் விருதினை அவரிடம் காண்பித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், கார்த்திகி கொன்சால்வ்ஸுக்கு ஒரு கோடி பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு வழங்கினார். 

புகைப்படப் பத்திரிகையாளரான கார்த்திகி கொன்சால்வெஸ்  காட்டுயிர் ஆர்வலர் ஆவார். பயணங்களில் ஆர்வம் கொண்ட கார்த்திகி இயற்கைக்கும் இந்திய பழங்குடியின சமூகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆவணப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
Embed widget