Karthigai Deepam: ஹனிமூன் எப்படி போகுது? மருமகனிடம் விசாரிக்கும் மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று இதான்!
Karthigai Deepam: கார்த்திக் - ரேவதியும் ஹனிமூன் சென்றுள்ள நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் விபத்தில் சிக்கிய ஒரு சிறுவனை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சந்தோஷப்படும் சாமுண்டீஸ்வரி:
அதாவது, கார்த்திக் ரேவதிக்கு ஒரு சொட்டர் வாங்கி கொடுக்கிறான், இதனை தொடர்ந்து இவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கின்றனர். பிறகு தோழி ரேவதியின் போனை வாங்கி எல்லாரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை சாமுண்டீஸ்வரிக்கு அனுப்பி வைக்கிறாள். இதில் கார்த்தியும் ரேவதியும் ஜோடியாக இருப்பதை பார்த்த சாமுண்டீஸ்வரி சந்தோசப்படுகிறாள்.
ஹனிமூன் எப்படி போகுது?
மேலும் குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் போட்டோவை காட்டுகிறாள். கார்த்திக்கு போன் போட்டு என்ன மாப்பிள்ளை ஹனிமூன் எல்லாம் நல்லபடியா போகுதா என்று விசாரிக்கிறாள்.
அடுத்து ரேவதியின் தோழி உங்களுக்காக ஒரு பையர் கேம்பைன் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறாள். இருவரும் கண்டிப்பா வரணும் என்று சொல்லி கூப்பிட இவர்களும் ஓகே என சம்மதம் சொல்கின்றனர்.
ஃபயர் கேம்பைன்:
பிறகு ரூமுக்கு வந்ததும் ரேவதி கார்த்தியிடம் வர முடியாதுனு சொல்ல வேண்டியது தானே என்று திட்ட கார்த்திக் உன்னுடைய ப்ரண்ட் தானே.. நீ சொல்லி இருக்கலாம்ல என பதில் கொடுக்கிறான். அடுத்து இருவரும் ஃபயர் காம்பைன் செல்கின்றனர். அங்கே கேக் ஏற்பாடு செய்து கார்த்திக், ரேவதியை ஜோடி சேர்ந்து வெட்ட வைக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















