![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ethirneechal serial: குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று நடப்பது என்ன?
Ethirneechal serial : சித்தார்த்தை மண்டபத்துக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக பயங்கரமாக குணசேகரன் பிளான் போடா அவரின் திட்டத்தை முறியடிக்க கதிர், ஜனனி மற்றும் கொன்றவை கூட்டணி சேர்ந்துவிட்டனர்.
![Ethirneechal serial: குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று நடப்பது என்ன? Sun tv Ethirneechal serial today episode written update April 10 promo Ethirneechal serial: குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று நடப்பது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/d894a407bcfb9fc93ffce10e5793ec7c1712711622924224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு எதிராக மொத்த குடும்பமும் திரும்பிவிட்டாலும் அவரின் ராஜாங்கமே நடைபெற்று வருகிறது. நேரத்திற்கு ஏற்ற மாதிரி பிளானை மாற்றிக்கொண்டே இருக்கிறார்.
இன்றைய (ஏப்ரல் 10) எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜனனி, கதிர் மற்றும் ஸ்பெஷல் ஆபீசர் கொன்றவை மூவரும் ஜனனியின் அம்மா மற்றும் தங்கையை தேடி செல்லும் போது ராமசாமியையும் கிருஷ்ணாசாமியையும் வழியில் பார்த்துவிடுகிறார்கள். அவர்களின் காரை பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
ராமசாமி மற்றும் கிருஷ்ணாசாமிக்கு குணசேகரன் போன் செய்து பேசுகிறார். "நான் குடுக்குற பதிலடில சித்தார்த் தம்பியை கூட்டிட்டு வந்து மண்டபத்துல விடணும்" என ஏதோ பிளான் சொல்கிறார்.
தர்ஷினியிடம் பேசுவதற்காக ஈஸ்வரி ரூமுக்கு போகிறாள். உமையாள் ஈஸ்வரியை தர்ஷினியிடம் நெருங்க விடவில்லை. "அவளை நான் பாத்துக்குறேன். நீங்க போங்க" என ஈஸ்வரியை விரட்டுகிறாள் உமையாள். "முதலில் நீ வெளியே போடி" என ஈஸ்வரி ஆவேசமடைய உமையாள் பதிலுக்கு ஈஸ்வரியை மிரட்டுகிறாள். ஞானம் ஈஸ்வரிக்கு ஆதரவாக "யார் வீட்டுக்கு வந்து யாரை கத்துற" என சொல்லி உமையாளை எதிர்க்க திருதிருவென முழிக்கிறாள் உமையாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்று நடந்தது என்ன?
நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் மாதர் சங்கத்தின் உதவியுடன் ஈஸ்வரி குணசேகரனை எதிர்கிறாள். தர்ஷினிக்கு இந்த கல்யாணத்தை நான் நடத்தி வைக்க விடமாட்டேன் என ஆவேசமாக பேசுகிறாள் ஈஸ்வரி. உடனே குணசேகரன் மொத்த பிளானை மாற்றி "தர்ஷினிக்கு கல்யாணம் என யார் சொன்னது? நான் கல்யாணம் செய்து வைப்பது என்னுடைய மகன் தர்ஷனுக்கும், உமையாள் மகள் கீர்த்திக்கும் தான்" என சொல்ல தர்ஷனை சம்மதம் கேட்க தர்ஷனும் ஒத்துக்கொள்கிறான். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
"தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் செய்து வைக்க போகிறேன் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது" என கேட்க ஞானம் நான் தான் ஆதாரம் என்கிறான் . ஆனால் குணசேகரன் ஞானத்தை அவமானப்படுத்தி விட்டு விசாலாட்சி அம்மாவை கேட்க அவரும் ஆமாம் தர்ஷனுக்கு தான் நிச்சயம் என சொல்கிறார். மாதர் சங்கத்தில் இருந்தவர்களை மிரட்டி அனுப்பி வைக்கிறார் குணசேகரன்.
சக்தி சித்தார்த்தை தேடி கதிர் சொன்ன இடத்துக்கு செல்ல அவனை கரிகாலன் பாலோ செய்து போகிறான். சக்தி சித்தார்த்திடம் பொறுமையாக பேசுகிறான். ஆனால் "என்னை அம்மாவிடம் கூட்டிட்டு போங்க நான் பேசுறேன்" என சித்து சொல்ல போன சக்தி அவனை அடிக்கிறான். இதை கரிகாலன் வீடியோ எடுத்து விடுகிறான்.
ஈஸ்வரி குணசேகரனிடம் சவால் விடுகிறாள். "என்னோட பொண்ணோட வாழ்க்கை அவளோட விருப்பபடி தான் நடக்கும். ஜீவானந்தம் மனைவி, அப்பத்தாவை கொன்றது, தர்ஷினியை கடத்தி வைத்து இருந்தது இப்படி எல்லாத்துக்கும் பின்னாடி யார் இருந்தாங்க என்ற உண்மையை கண்டுபிடிக்காமல் நான் விடமாட்டேன்" என்கிறாள் ஈஸ்வரி. இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)