மேலும் அறிய

Ethirneechal: உசுப்பேத்திவிட வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்: அவமானப்பட்ட கதிர்: எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal: பிரச்சினையை ஊதிப் பெருசாக்க குணசேகரன் வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்.. கோபத்தில் கொந்தளித்த கதிருக்கு கடைசியில் மிஞ்சியது அவமானம் தான்.. இன்றைய எதிர்நீச்சல் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்.21) எபிசோடில் ஜனனியும் சக்தியும் சென்னையில் சி.எம் செல் தலைமை அதிகாரியை சந்தித்து தர்ஷினி காணாமல் போனது, குணசேகரன் வீட்டுப் பெண்கள் மீது புகார் கொடுத்தது என அனைத்தையும் சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைக்கிறார்கள். அவரும் கவலைப்பட வேண்டாம் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

வீட்டில் தாரா நந்தினியின் நகைகளை கழட்டித் தரச் சொல்லி கேட்கிறாள். "இந்த நகைகளை நாம எப்போ வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். என்றாவது ஒரு நாள் இத்தனை நாள் இந்த வீட்டில் சாப்பிட்டதற்கு பெரியப்பா கணக்கு சொல்வார். இந்த நகைகளை கொடுத்து விடலாம்" என சொல்லி கதிரை விட்டு மஞ்சள் கயிறு ஒன்றை நந்தினி கழுத்தில் கட்டி விடச் சொல்லி, நகைகளை வாங்கிக் கொண்டு போய் குணசேகரனிடம் கொடுக்கிறாள் தாரா. 

 
Ethirneechal: உசுப்பேத்திவிட வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்: அவமானப்பட்ட கதிர்: எதிர்நீச்சலில் இன்று!
 
"எங்க அப்பாவை, என்னை வளர்த்ததுக்கு எல்லாம் நிறைய செலவு ஆகியிருக்கும். இப்போதைக்கு இதை வைச்சுக்கோங்க. மீதியை கொஞ்சம் கொஞ்சமா செட்டில் பண்ணிடுறோம்" என தாரா குணசேகரனிடம் சொல்ல, "யார் உன்னை ஏவி விட்டது" என கோபம் தலைக்கு ஏற, வெளியில் வந்து கதிரைப் பார்த்து "என்ன என்னை அசிங்கப்படுத்துறியா?" எனக் கேட்க "யாரும் சொல்லிக் கொடுக்கல. உங்க குணம் என்னனு அவ மனசுல பதிஞ்சு போய் இருக்கு. அது தான் அவ அப்படி நடந்துக்குற" என நந்தினி சொல்கிறாள். 
 
 "உனக்கு சம்பாதிக்க முடியலனா என்கிட்டே கேளு. சம்பாதிக்க வக்கு இல்ல. நீ என்னைக்குமே ஓசி சோறு தான்" என கதிரை அவமானப்படுத்தி பேசுகிறார். "நீங்களா நானான்னு பாக்கலாம்" என நகைகளை வாங்கி கொள்கிறார் குணசேகரன். அண்ணனை எதிர்த்து சவால் விடுகிறான் கதிர். "உனக்கு முன்னாடி  சம்பாதிச்சு வாழ்ந்து காட்டுறேன். உனக்கு இருக்க திமிரு எனக்கும் இருக்கு" என ஆவேசமாக பேசுகிறான் கதிர்.

ஈஸ்வரியும், ஜீவானந்தத்தையும் நீதிபதி முன்னால் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். ஈஸ்வரி நீதிபதியிடம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த அனைத்தையும் பற்றி சொல்கிறாள். "தர்ஷினியைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய பொண்ணை தயவு செய்து கண்டுபிடித்து கொடுங்கள்" என கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி கேட்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குணசேகரனை சந்திக்க நாச்சியப்பனின் அம்மா, ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். "இத்தனை வருஷமா உன்னோட வாழ்ந்த உன்னோட பொண்டாட்டியே இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்காளே" என குணசேகரனை உசுப்பேத்தி விடுகிறார் நாச்சியப்பனின் அம்மா. அந்த நேரம் பார்த்து ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வந்து அவர்கள் வந்திருப்பதைப் பற்றி கேட்டதும் கோபத்துடன் வீட்டுக்குள் சென்று "இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?" என ஜனனி அதட்டிக் கேட்க, குணசேகரன் அவளைப் பார்த்து முறைக்கிறார்.

Ethirneechal: உசுப்பேத்திவிட வீட்டுக்கு வந்த ராமசாமி குடும்பம்: அவமானப்பட்ட கதிர்: எதிர்நீச்சலில் இன்று!

அந்த நேரத்தில் ரேணுகாவின் அம்மா வீட்டுக்கு வந்து ரேணுகாவுக்கும் ஞானத்துக்கும் பணம் கொடுக்கிறார். அதைப் பார்த்த குணசேகரன் நக்கலாக  "அடி சக்க, அப்படி போடு" என கிண்டலடிக்க, கோபத்தில் ரேணுகா "இது எங்க அம்மா வீட்டு காசு. அவங்களா விருப்பப்பட்டு கொடுக்குறாங்க. உங்கள மாதிரி அடிச்சு புடுங்கல" எனக் கொந்தளிக்கிறாள்.
 


குணசேகரன் கோபமாகப் பேச "இந்த மாதிரி சின்ன பசங்க கிட்ட எதுக்கு சார் நீங்க கோபப்படறீங்க. நாங்க இருக்கோம் சார்?" என ராமசாமி திமிராகப் பேசுகிறான். அவன் சட்டையை எகிறிக்கொண்டு போய் பிடித்த கதிர் "என்னடா என்ன பேசிகிட்டு இருக்க" எனவும், கதிரை மிரட்டி சட்டையை விடச் சொல்கிறார் குணசேகரன். இதை சற்றும் எதிர்பார்க்காத கதிர் அதிர்ச்சியுடன் குணசேகரனைப் பார்க்கிறான். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  எபிசோடுக்கான ஹிண்ட்.    

  
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget