சரிகமப கிராண்ட் பைனலில் காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்! சிறப்பு விருந்தினராக வரும் டாப் ஹீரோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், இந்த வாரம் நடைபெற உள்ள 'சரிகமப கிராண்ட் பைனல்' நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக முன்னணி நடிகர் கலந்து கொள்ள உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4:
உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியின், இறுதி போட்டி மிக பிரம்மாண்டமாக வரும் ஞாயிறு மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஃபைனல் போட்டியாளர்கள்:
இந்த போட்டியில், ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ் மற்றும் மஹதி என மொத்தம் 6 போட்டியாளர்கள் இறுதி சுற்றில் மோத உள்ளனர். சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இறுதி போட்டி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
சிவகார்த்திகேயன்:
இந்த நிலையில் தற்போது, சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது





















