Meenakshi Ponnunga Aug 7: பூஜா கழுத்தில் தாலி கட்டப் போகும் வெற்றி... கடைசி நேரத்தில் ட்விஸ்ட்... மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்று!
மறுபக்கம் வெற்றிக்கும் பூஜாவுக்கும் கல்யாண ஏற்பாடு நடக்கும் விஷயம் அறிந்த நீதிமணி சக்தியிடம் வந்து விஷயத்தை சொல்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் புஷ்பா கொடுத்த திட்டத்தின்படி வெற்றியை கோயிலுக்கு வரவழைத்து பூஜாவின் கழுத்தில் தாலி கட்ட வைக்க திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மணக் கோலத்தில் பூஜாவும் வெற்றியும் உட்கார்ந்திருக்க, வெற்றி ஒன்றும் புரியாமல் முழிக்க, சரளா தாலியை ஆசீர்வாதம் வாங்கி எடுத்து வரும்போது தான் கல்யாணம் என்று தெரிய வருகிறது. இதனால் வெற்றி கோபப்பட, சரளா அவனது காலில் விழுந்து ‘தாலியை மட்டும் கட்டிடு’ என கெஞ்சுகிறாள்.
மறுபக்கம் வெற்றிக்கும் பூஜாவுக்கும் கல்யாண ஏற்பாடு நடக்கும் விஷயம் அறிந்த நீதிமணி சக்தியிடம் வந்து விஷயத்தை சொல்ல, கல்யாணத்தை நிறுத்துவதற்காக வரும் சக்தி, வெற்றி மணக்கோலத்தில் இருப்பதைப் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் நிற்க அவளுக்கு வெற்றி சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.
கோயிலுக்குள் புஷ்பா இருப்பதால் வெளியே காத்திருக்கும் நீதிமணி மனமுடைந்து வெளியே வரும் சக்தியிடம் “நீ கவலைப்படாமல் வீட்டுக்குப் போ.. இந்தக் கல்யாணத்தை நான் தடுத்து நிறுத்துகிறேன்” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
அதன் பிறகு அவர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுக்க, கோயிலுக்கு விரைந்து வரும் போலீஸ் பாம் இருப்பதாக சொல்லி அனைவரையும் கலைந்து செல்லச் சொல்கின்றனர்.
உடனே வெற்றி மணமேடையில் இருந்து எழுந்து கொள்ள, பூஜா அவனது கையைப் பிடித்து “தாலியை மட்டும் கட்டிவிட்டுப் போ” என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















