Meenakshi Ponnunga: சக்தியை பார்க்க வந்த மாப்பிள்ளையை அடித்து விரட்டிய மீனாட்சி...இன்றைய எபிசோடின் ஹைலைட்ஸ் இதோ..!
மீனாட்சியும் யமுனாவும் கார்த்திக்கின் அம்மா போட்ட கண்டிஷனை ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். சக்தி இந்த கல்யாணத்தை நடத்துவேன் என சொல்கிறார்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தியை பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டினர் வரும் காட்சிகள் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
முன்னதாக வெற்றியின் முட்டாள் தனத்தால் யமுனா நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் அது தடைபடுகிறது. மாப்பிள்ளை கார்த்திக் திருமணத்தில் உறுதியாக இருக்க இந்த திட்டத்தை கெடுக்க அவரது பெற்றோர் நினைக்கின்றனர். அச்சமயத்தில் கார்த்திக் வீட்டில் சென்று சக்தி மன்னிப்பு கேட்டு திருமணம் நடக்க வேண்டும் என சொல்லும் போது நீ முதலில் திருமணம் செய்தால் இந்த திருமணம் நடக்கும் என கார்த்திக் அம்மா கறாராக சொல்லிவிடுகிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்ன பார்க்கலாம்.
View this post on Instagram
மீனாட்சியும் யமுனாவும் கார்த்திக்கின் அம்மா போட்ட கண்டிஷனை ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். சக்தி இந்த கல்யாணத்தை நடத்துவேன் என சொல்கிறார். அதேசமயம் இந்த பக்கம் பீல் பண்ணும் வெற்றியை சரண்யா சமாதானப்படுத்துகிறார். அப்போது போது ரங்கநாயகி பூஜாவுடன் நிச்சயம் பண்ண வெற்றியிடம் சம்மதம் பெறுகிறார்.
இதனையடுத்து மீனாட்சி சாமியிடம் வேண்டும்போது ஜோசியரிடம் இருந்து போன் வருகிறது. அதில் சக்திக்கு ஒரு மாப்பிள்ளை இருக்கிறது என்று மீனாட்சியிடம் சொல்கிறார். அது மட்டுமல்லாமல் சிறிது நேரத்திற்கு பிறகு ஜோசியர் மீனாட்சி வீட்டுக்கு வருகிறார். சக்தி ஜாதகத்தில் கல்யாண யோகம் வந்துவிட்டது என்றும், இப்பொழுதே நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம் எனவும் ஜோசியர் சொல்கிறார்,
ஆனால் மீனாட்சி யமுனாவுக்கு கல்யாணம் முடிந்த பிறகுதான் சக்தி கல்யாணம் முடிக்க முடியும் என ஜோசியரிடம் சொல்கின்றார். அந்த நேரத்தில் மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் சக்தியை பொண்ணு பார்க்க வருகின்றனர், மாப்பிள்ளை தாமதமாக வருகிறார். வீட்டுக்கு வந்ததும் மாப்பிள்ளை சக்தியை பற்றி வழியில் தவறான விஷயங்களை கேள்விப்பட்டேன் எனக் கூறி அவளைப் பற்றி தப்பாக பேசுகிறார். இதை பார்த்த மீனாட்சி கோவமாக மாப்பிள்ளையை அறைந்து அவர்களை விரட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















