![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Meenakshi Ponnunga: புஷ்பா செய்த சதியால் கண் கலங்கி நிற்கும் 3 மகள்கள்...மீனாட்சி எடுத்த முடிவு என்ன?
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
![Meenakshi Ponnunga: புஷ்பா செய்த சதியால் கண் கலங்கி நிற்கும் 3 மகள்கள்...மீனாட்சி எடுத்த முடிவு என்ன? meenakshi ponnunga serial today episode 64 highlights Meenakshi Ponnunga: புஷ்பா செய்த சதியால் கண் கலங்கி நிற்கும் 3 மகள்கள்...மீனாட்சி எடுத்த முடிவு என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/28/7594569e7c9877d40d2ee1399465f76a1666952028243572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் தன்னுடைய 3 மகள்களுக்காக சமையல் ஆர்டரை நிறைவேற்ற மீனாட்சி என்ன முடிவு எடுக்கிறார் என்பது இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம்.
மீனாட்சி பொண்ணுங்க | Monday - Friday 9 PM.#MeenakshiPonnunga #Meenakshi #Sakthi #Yamuna #Durga #ZeeTamil #NewSerial pic.twitter.com/xYgpcEkNs3
— PR Sudharshan ( Casting Director & PR ) (@Pr_sudharshan) August 2, 2022
சமையல் வேலை செய்வதற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட ஆட்களை சங்கிலி மற்றும் புஷ்பா பணம் கொடுத்து வரவிடாமல் செய்கின்றனர். இது புஷ்பாவின் வேலை என்று சாந்தா சொல்ல மீனாட்சி அதிர்ச்சியடைகிறார். மேலும் யார் தயவும் இல்லாமல் தனி ஆளாக தன் 3 பெண்களுக்காக 400 பேருக்கும் தானே சமைப்பேன் என்று சபதம் எடுப்பதோடு மீனாட்சி இரவு முழுவதும் சமையல் வேலைகளை வெறித்தனமாக செய்து முடிக்கிறாள்.
இதற்கிடையில் மீனாட்சியைக் காணாமல் மகள் யமுனா சாந்தாவிற்கு போன் செய்து விசாரிக்கிறாள்.விஷயத்தை சாந்தா சொல்ல, அங்கு மீனாட்சியை தேடி யமுனா, துர்கா இருவரும் வருகிறார்கள். அப்போது மீனாட்சியின் கையில் சமையல் வேலை செய்ததால் ஏற்பட்ட காயத்தை பார்த்து வருத்தம் கொள்கின்றனர். அதேசமயம் ஆட்களை வைத்து மீனாட்சி சமையல் செய்த சாப்பாட்டை எடுத்துச் செல்ல வரும் ஆர்டர் கொடுத்த நபர் மீனாட்சிக்கு தங்கச்சங்கிலியை பரிசாக கொடுத்து செல்கிறார்.
பின்னர் வீட்டுக்கு வரும் மீனாட்சி சக்திக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சக்தி வந்து விடுகிறார். அம்மா சோர்வாக இருப்பதை பார்த்து மற்றவர்களிடம் காரணம் கேட்கிறார். உண்மையை தெரிந்து கொண்ட சக்தி மீனாட்சியின் கைகளை பிடித்து அழுகிறாள். இதனையடுத்து தன் மகள் யமுனாவிற்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால் தாம்பாள தட்டுடன் மீனாட்சி நீதிமணியின் வீட்டிற்கு வர புஷ்பா முறைத்து பார்ப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)