Karthigai Deepam Serial: மாயாவால் கடுப்பாகிய சாமுண்டீஸ்வரி! புடவையை மாற்றிய மயில்வாகனன்!
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று புடவை விவகாரத்தால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி புடவை எடுக்க கடைக்காரரை வீட்டுக்கு வர வைத்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மாயாவைப் பார்த்து கடுப்பாகும் சாமுண்டீஸ்வரி:
அதாவது, மாயா வீட்டுக்கு வர அவளை பார்த்த சாமுண்டீஸ்வரி கடுப்பாகிறாள். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் உங்களுக்கு பிடித்த புடவையை எடுத்துக்கோங்க என சொல்கிறாள்.
இதற்கிடையில் பரமேஸ்வரி பாட்டி மயில்வாகனத்திற்கு போன் செய்த ஒரு இடத்திற்கு வர சொல்ல மயில் வாகனம் ராஜராஜனிடம் சொல்லி விட்டு கிளம்பி செல்கிறான்.
புடவையை மாற்றி வைத்த மயில்வாகனம்:
பாட்டி ஒரு புடவையை கொடுத்து ரேவதி எடுக்கும் புடவைக்கு பதிலாக மாற்றி வைக்க சொல்கிறார். வீட்டுக்கு வந்த மயில் வாகனம் புடவைகளோடு இதை கலந்து வைக்க ரேவதி இந்த புடவையை தேர்வு செய்ய சாமுண்டீஸ்வரியும் ஓகே சொல்கிறாள்.
அதை தொடர்ந்து கார்த்திக்கிடம் மயில் வாகனம் பாட்டி கொடுத்த புடவை என்ற விஷயத்தை சொல்கிறான். ஒரு கட்டத்தில் ரேவதிக்கும் புடவை குறித்த விஷயம் தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















