மேலும் அறிய

Ethir neechal July 17 : போர்க்களமாக மாறிய குணசேகரன் வீடு.. தாண்டவமாடிய தாரா.. எதிர்நீச்சலில் நேற்று

* ரகளை செய்து தர்ஷினியை அசிங்கப்படுத்திய குணசேகரன்* தாராவால் அடுத்த சண்டை ஆரம்பித்ததுநேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷினியின் ஃப்ரெண்ட் சேர்ந்து படிப்பதற்காக வீட்டிற்கு வந்ததை வைத்து பெரிய ரகளை செய்கிறார் குணசேகரன். அந்த பையன் என்னால் உங்கள் வீட்டில் பிரச்சனை வேண்டாம் நான் சென்று விடுகிறேன் என சொல்ல தர்ஷினி "அவர் கொஞ்ச நேரம் கத்திட்டு தானாகவே அடங்கிடுவாரு" என்கிறாள் அதை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார் குணசேகரன்.

ஸ்கூலில் நங்கள் இருவரும் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்கிறோம் அதனால் அதற்காக நோட்ஸ் எடுப்பதற்காக தான் அவன் இங்கு வந்தான் என தர்ஷினி எவ்வளவு சொல்லியும் குணசேகரன் வார்த்தைகளை தேள் போல கொட்டுவதை நிறுத்தியபாடில்லை. கோபமான தர்ஷினி "நான் செய்தது தான் தவறு. இது ஒரு காட்டுமிராண்டி வீடு என தெரிந்தும் உன்னை இங்கே வரவைத்தது என்னுடைய தப்பு தான். தயவு செய்து இங்கு இப்படி நடந்ததற்கு நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாம் ஸ்கூலில் சந்திக்கலாம்" என சொல்லி அனுப்பி விடுகிறாள். 

Ethir neechal July 17 : போர்க்களமாக மாறிய குணசேகரன் வீடு.. தாண்டவமாடிய தாரா.. எதிர்நீச்சலில் நேற்று


படிக்கிறது ஒரு குத்தமா? இந்த வீடு தான் அப்பா உங்களுடையது இந்த உலகம் எல்லாருக்கும் சொந்தமானது. இனிமேல் என்னை சார்ந்தவர்கள் யாரும் இந்த வீட்டுக்கு வரமாட்டார்கள் ஆனால் நான் செல்வேன். எல்லா விஷயத்திலும் சாதிப்பேன். யாராலும் என்னை தடுக்க முடியாது. உங்களை அப்பா என சொல்லவே எனக்கு அசிங்கமாக இருக்கிறது" என சொல்கிறாள். உடனே உச்சத்திற்கு சென்ற குணசேகரன் "அப்போ உயிரை விட்டுரு. அப்பா என சொல்ல பிடிக்கலனா நான் கொடுத்த உயிர் மட்டும் எதுக்கு"  என்கிறார். இதை கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

ஐஸ்வர்யா வந்த ஞானத்திடம் " அப்பா இன்று முதல் நான் புது ஸ்கூலுக்கு போகிறேன். உங்களுக்கு பிடிக்காது என தெரியும் ஆனால் நிச்சயம் நீங்கள் பெருமைப்படும்படி நான் இருப்பேன்" என சொல்கிறாள். இதை கேட்ட ஞானத்திற்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. 

Ethir neechal July 17 : போர்க்களமாக மாறிய குணசேகரன் வீடு.. தாண்டவமாடிய தாரா.. எதிர்நீச்சலில் நேற்று

வீட்டின் சுட்டி பெண் தாரா வந்து நந்தினியிடம் இன்னைக்கு எங்க ஸ்கூலில் பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங் இருக்கு, அப்பா தான் வரவேண்டும் என மிஸ் சொன்னாங்க என்கிறாள். கதிர் என்னால் போக முடியாது என்கிறான். அப்படி உங்களால் வரமுடியவில்லை என்றால் இங்கிலீஷில் லெட்டர் எழுதி கையெழுத்து போட்டு கொடுங்கள் என்கிறாள் தாரா. என்னால் அதெல்லாம் போட முடியாது என்கிறான் கதிர். நந்தினி நான் வருகிறேன் என சொன்னதும் ”தேவையே இல்லை எனக்கு அப்பா அம்மா இரண்டு பேருமே இல்லை" என சொல்லிக்கொள்கிறேன் என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். 

பட்டம்மாள் சொத்து இன்றைக்கு ஜீவநாதம் பெயரில் மாறிவிடும் என்பதால் அதற்கான கன்ஃபர்மேஷன் காலுக்காக காத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு போன் செய்தவர் உங்கள் பெயரில் மாறிவிட்டது என்கிறார். அதை செக் செய்து பார்த்ததில் பட்டம்மாள் ஷேரின் ஓனர்ஷிப் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது என்பதை உறுதிசெய்த பின்னர் அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். அடுத்த கட்ட வேலைகளை தொடங்க தயாராகிறார்கள். 

பள்ளியில் தர்ஷினி பாக்ஸிங் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறாள். அவள் சண்டையிடுவதை ஒட்டுமொத்த ஸ்கூலே வாய்பிளந்து பார்த்து கொண்டு இருக்கிறது. அவள் பாக்ஸிங் செய்வதை பார்த்த ஈஸ்வரி பெருமைபடுகிறாள். ஆனால் தர்ஷினி ஜெயித்த பிறகு சோர்ந்து போய் விடுகிறாள். அடுத்த வாரம் மேட்ச் இருக்கிறது. அதனால் அவளுக்கு ஊட்டச்சத்தான உணவு கொடுக்க சொல்லி மாஸ்டர் கூறுகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: நடு இரவில் மாயமான மனைவி.. தேடிச் சென்ற கணவன்! கண்டுபிடித்தானா கார்த்திக்?
Karthigai Deepam: நடு இரவில் மாயமான மனைவி.. தேடிச் சென்ற கணவன்! கண்டுபிடித்தானா கார்த்திக்?
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
Embed widget