![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Baakiyalakshmi Serial: கோபியை வீட்டை விட்டு துரத்திய பாக்யா... பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் திருப்பம்..!
ஒரு வருஷத்துல நீங்க கேட்ட பணத்தை நான் கொடுக்கிறேன். இல்லையா நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன் என கோபியிடம் பாக்யா கூறுகிறார்.
![Baakiyalakshmi Serial: கோபியை வீட்டை விட்டு துரத்திய பாக்யா... பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் திருப்பம்..! baakiyalakshmi serial episode 594 Baakiyalakshmi accepts to settle the amount demanded by Gopinath Baakiyalakshmi Serial: கோபியை வீட்டை விட்டு துரத்திய பாக்யா... பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் திருப்பம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/fa6d8b56d1f7e879582fd4d47412a56e1660810369651224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவிடம் சவால் விட்டு கோபி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
முடியல தலைவரே முடியல..! 😂
— Vijay Television (@vijaytelevision) August 18, 2022
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VIjayTelevision pic.twitter.com/4qTqcHpS8X
வீட்டை விட்டு வெளியேறிய கோபி
நேற்றைய எபிசோடில் பாக்யாவின் விஸ்வரூபத்தால் நான் வீட்டை விட்டு செல்ல ரெடி. ஆனால் இந்த வீட்டைக் கட்ட நான் ரூ.40 லட்சம் செலவு பண்ணிருக்கேன். அந்த பணத்தை கொடுங்க நான் போறேன் என அவரிடம் கோபி தெரிவிக்கிறார். பாக்யா ரொம்ப கூலாக அந்த 40 லட்சம் பணத்தையும் நான் தருகிறேன் என கூறுவதோடு அதற்கு வட்டி வேணுமா சேர்த்து வாங்கிக்கோங்க என தெரிவிக்கிறார். இன்னும் ஒரு வருஷத்துல நீங்க கேட்ட பணத்தை நான் கொடுக்கிறேன். இல்லையா நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன். இதனைக்கேட்டு அதிர்ச்சியடையும் ஈஸ்வரி, பாக்யாவை திட்டுகிறார். ஆனால் கோபி ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அவரை சமாதானப்படுத்த ஈஸ்வரி, இனியா, செழியன் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை.
பின்னர் ஈஸ்வரி பாக்யாவிடம் இனிமேல் கோபி என்றைக்கு இந்த வீட்டுக்கு வாரானோ அன்னைக்கு நான் உன்கிட்ட பேசுவேன் என கூறி செல்கிறார். செழியனோ உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க...அப்பாவை வீட்டை விட்டு அனுப்பிட்டீங்க என பாக்யாவை விமர்சிக்க தாத்தா மூர்த்தி டென்ஷனாகி அவரை எச்சரிக்கிறார். இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய கோபி நடுரோட்டில் நின்றுக் கொண்டு தன்னுடைய நிலைமையை நினைத்து புலம்புகிறார். கோபப்படுகிறார். அப்போது கோபியின் நண்பர் அங்கு வருகிறார்.
அவரிடம் பாக்யா தன்னை வீட்டு துரத்தியதை எண்ணி புலம்புகிறார். கோபியை நண்பர் சமாதானப்படுத்துவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து இதே காரணத்தைக் கொண்டு ராதிகா வீட்டுக்கு சென்று அவர் மனதை கோபி மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)