![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Telephone Raj on Bayilvan : ஒரு டயலாக் கூட பேச முடியாது... பயில்வானை பங்கம் செய்து கலாய்த்த காமெடியன்
நடிகர் நடிகையர் குறித்த பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சையான பேச்சு பற்றி விமர்சனம் செய்துள்ளார் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் காமெடி நடிகர் டெலிபோன் ராஜ்.
![Telephone Raj on Bayilvan : ஒரு டயலாக் கூட பேச முடியாது... பயில்வானை பங்கம் செய்து கலாய்த்த காமெடியன் Telephone Raj opens up about issues created by Bayilvan's unwanted speech Telephone Raj on Bayilvan : ஒரு டயலாக் கூட பேச முடியாது... பயில்வானை பங்கம் செய்து கலாய்த்த காமெடியன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/4ccbabee0a5a7ccc104228d2f74331a71685549245591224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவரான பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர். தற்போது பெரிதாக எந்த படத்தில் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூடியூப் சேனலில் சினிமா நட்சத்திரத்தின் கிசு கிசு தகவல் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும்.
சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் நடிகையர் பற்றி ஏடாகூடமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். 80களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். சில நேரங்களில் சில தகவல்களை நேரில் பார்த்தது போலவே சொல்லி சர்ச்சையில் சிக்குவதும் பயில்வானின் வேலை. இப்படி சினிமாத்துறையில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் பயில்வான் ரங்கசாமி மீது தற்போது சட்ட ரீதியாக புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இயக்குநர் பாலா, பாடலாசிரியர் தாமரை, தயாரிப்பாளர் கே, ராஜன், நடிகை ஓவியா என பலரையும் விமர்சித்த பயில்வானை ரேகா நாயர் அடிக்கவே செல்லும் அளவிற்கு கொச்சையாக பேசியிருந்தார் பயில்வான்.
அந்த வகையில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் இணைந்து நடித்த டெலிபோன் ராஜ் பயில்வான் குறித்து படு மோசமாக விமர்சித்துள்ளார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டெலிபோன் ராஜ், பயில்வான் குறித்து பேசுகையில் 'ஷூட்டிங் சமயத்தில் பயில்வானால் ஒரு வசனத்தை கூட முழுசா பேச முடியாது. அந்த அளவிற்கு ஞாபக மறதி இருக்கும். கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருக்கும். இந்த லட்சணத்தில் இருந்த இவர் இப்போது நடிகர் நடிகைகள் பற்றின அந்தரங்க விஷயங்களை பற்றி வாய் கூசாமல் பேசி வருகிறார்.
அவரின் குடும்ப சூழல் காரணமாகத்தான் அவர் இப்படி எல்லாம் பேசி சம்பாதித்து வருகிறார். அடுத்தவர்களை பற்றி அவதூறாக பேசி 500 , 1000 என சம்பாதித்து குடும்பத்தை நடத்தி வருகிறார். ஏதோ ஒரு நடிகர் ஒரு நடிகையை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றால் இவருக்கு என்ன வந்தது. இவரால் அப்படி செய்ய முடியவில்லை என்பதற்காக மற்றவர்களை அவதூறாக பேசுவது நல்லவா இருக்கு என டெலிபோன் ராஜ், பயில்வான் குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்” இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)