மேலும் அறிய

Watch Video : "முதல்ல ஊரு தான்.. அப்புறம்தான் சினிமா எல்லாம்” - வெள்ள மீட்பு பணியில் தீவிரம் காட்டும் மாரி செல்வராஜ்..!

ஶ்ரீவைகுண்டம் பகுதியில் இருக்கும் மக்களை தொடர்பு கொள்ளவே முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த பகுதியில் இயக்குநர் மாரி செல்வராஜ் வீடு அமைந்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது. 

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதி ஆகிய இரு  தினங்களில் அதீத  கனமழை பெய்தது.  இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து இடங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்து போயினர். தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் என அனைத்தும் முழுவீச்சில் களம் கண்டாலும் மக்களை மீட்பதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது. 

தண்ணீர் அளவு கூடிக்கொண்டே சென்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இதில்  ஶ்ரீவைகுண்டம் பகுதியில் இருக்கும் மக்களை தொடர்பு கொள்ளவே முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த பகுதியில் இயக்குநர் மாரி செல்வராஜ் வீடு அமைந்துள்ளது. அவர் உடனடியாக மீட்பு பணியில் தன் ஊர் மக்களுடன் இணைந்து தீவிரமாக ஈடுபட்டார்.

மேலும் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் மீட்பு  படகுகளால் கூட ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா ஆகிய 20 கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள் என தெரிவித்திருந்தார். 

இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜின் ஊர் பகுதியில் உள்ள வெள்ள பாதிப்பை பார்வையிட வந்தார். அப்போது வெளியான புகைப்படங்கள் மாரி செல்வராஜ் உதயநிதியின் வலதுகரம் போன்று செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், “மீண்டும் சென்னை போனாதான் நான் இயக்குநர். இது என் ஊரு என் மக்கள். நான் இயக்குநராக இல்லாவிட்டால் கூட இப்படித்தான் மக்களை மீட்டிருப்பேன். வெளியூரில் உள்ள மக்கள் அம்மாவை காணும், அப்பாவை காணும், எங்க ஊரு என்ன ஆச்சுன்னே தெரியலைன்னு சொல்றப்ப அதுமட்டும் தான் எனக்கு தெரியுது” என பதிலடி கொடுத்திருந்தார். 

உண்மையில், மாரி செல்வராஜ் சொல்வது மாதிரி வெளியூரில் வசித்தாலும், எத்தகைய பெரிய இடத்தில் இருந்தாலும் சொந்த ஊருக்கு ஒன்று என்றால் ஓடிவந்து உதவுபவர்கள் ஏராளம். ஆனால் களத்தில் இறங்குபவர்கள் எத்தனை பேர்?  அதில் மாரி செல்வராஜ் மட்டும் விதிவிலக்கா என்ன? - பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார் என்பவர்கள் எல்லாம் அவர் சொல்வது மாதிரி களத்தில் வேலை செய்தால் தான் புரியும். உதவிக்கரம் நீட்டாவிட்டாலும் பரவாயில்லை. இதுபற்றி களத்தில் நிஜமாகவே இறங்கி நிற்கும் நபர்களை இகழ்வதை நிறுத்த வேண்டும் என்பது தான் இணையவாசிகள் கருத்தாக உள்ளது. தான் புகழ்பெற்ற இயக்குநர் ஆனாலும் தன் மக்கள் படும் துன்பத்தை கண்டு பொறுக்க முடியாமல் மாரி செல்வராஜ் களத்தில் இறங்குவார் என அந்த ஊர் மக்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
State Education Policy: 3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
“காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
Embed widget