33 வயதில் உயிரிழந்த அக்கா சிந்து; அப்பா ஸ்தானத்தில் இருந்து அவர் மகளை இயக்குனருக்கு திருமணம் செய்து வைத்த சஞ்சீவ்!
ஆஸ்துமா உள்ளிட்ட பல பிரச்சனைகள் காரணமாக 33 வயதில் உயிரிழந்த நிலையில் நடிகை சிந்துவின் மகளுக்கு நடிகர் சஞ்சீவ் தான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

விஜயகாந்தின் பொன்மனச் செல்வன், புலன் விசாரணை, இணைந்த கைகள், பாட்டாளி மகன், புரியாத புதிர், ஊரி மரியாதை, பிஸ்தா, பூவேலி, பொண்ணு வீட்டுக்காரன், குங்கும பொட்டு கவுண்டர், சொக்க தங்கம், கிரி, அய்யா, ஜனா என்று பல படங்களில் நடித்தவர் நடிகை சிந்து. இவர் நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவின் அக்கா என்பது பலரும் அறிந்திராத உண்மை.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவருக்கு ஷ்ரேயா என்ற மகள் பிறந்தார். ஷ்ரேயாவிற்கு 9 வயதாக இருந்த போது சிந்து ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக 33 வயதிலேயே பரிதாபமாக உயிர்ந்துள்ளார். இவரின் மரணத்திற்கு காரணம் என கூறி பல வதந்திகள் முன்னர் பரவிய நிலையில், பின்னர் இதற்க்கு சஞ்சீவ் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஏற்கனவே சிந்து கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகரும் - தளபதி விஜயின் நண்பருமான சஞ்சீவ், தன்னுடைய அக்கா மகளை தனது மகளாக வளர்த்து அவருக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறார். தளபதி விஜய் நடித்த நாளைய தீர்ப்பு முதல், பல படங்களில் அவருக்கு நண்பராக சஞ்சீவ் நடித்துள்ளார். ஆனால் திரையுலகில் இவரால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், மெட்டி ஒலி, திருமதி செல்வம் போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
சஞ்சீவ் கடந்த 2009 ஆம் ஆண்டு சஞ்சீவ் நடிகை பிரீத்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதவ் என்ற மகன் மற்றும் லயா என்ற மகள் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் தனது அக்கா சிந்துவின் மகள் ஷ்ரேயாவிற்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஆம், ஸ்ரேயாவிற்கும் அஸ்வின் ராம் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார். அஸ்வின் ராம் அன்பறிவு மற்றும் டார்லிங் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சீவினின் அக்கா மகள் திருமணத்தில் தளபதி விஜய் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

