![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Roja Serial : அனுவிற்கு ஆதரவாக தனது குடும்பத்திடம் சண்டையிட்ட அர்ஜூன்...! அதிர்ச்சியில் ரோஜா ரசிகர்கள்..!
ரோஜா தொடரில் திடீரென அனுவிற்கு ஆதரவாக அர்ஜூன் தனது குடும்பத்தையே எதிர்த்து சண்டையிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
![Roja Serial : அனுவிற்கு ஆதரவாக தனது குடும்பத்திடம் சண்டையிட்ட அர்ஜூன்...! அதிர்ச்சியில் ரோஜா ரசிகர்கள்..! roja serial today episode arjun fight his family for negative role anu Roja Serial : அனுவிற்கு ஆதரவாக தனது குடும்பத்திடம் சண்டையிட்ட அர்ஜூன்...! அதிர்ச்சியில் ரோஜா ரசிகர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/22/2e958ba3f77d684bc1eec2885ea10dc2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் தொலைக்காட்சியில் அதிகளவு ரசிகர்களை கொண்ட தொடர் ரோஜா. கலகலப்பு, காமெடி என்று நகர்ந்த கதைக்களத்தில் 1000 எபிசோட்களை கடந்து, ரசிகர்களின் சுமார் ஒரிரு ஆண்டுகளின் எதிர்பார்ப்பான செண்பகம்- ரோஜா சந்திப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நடைபெற்றது. ஆனாலும், செண்பகத்தின் மகள்தான் ரோஜா என்பது கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தெரிந்தது.
ரசிகர்களின் பொறுமையை இவ்வாறு சோதித்தாலும் ரோஜா – அர்ஜூன் ஜோடிக்காகவும், அவ்வப்போது நடைபெறும் காமெடிகளுக்காகவும் ரோஜா ரசிகர்களுக்கு ரோஜா எப்போதும் ப்ரெஷ்ஷாகவே இருந்தது. இந்த நிலையில், சமீபகால ட்ரெண்டான ஹாரர் வெர்சனை தங்கள் சீரியலிலும் கையில் எடுத்த ரோஜா சீரியல் குழு ரோஜாவிற்கு பேய் வேடத்தை கட்டி களத்தில் இறக்கியது.
ரோஜாவின் அதிபயங்கரமான பார்ப்பவர்களை பயமுறுத்தும் என்று நம்பி போட்ட அந்த காமெடி பேய் கெட்டப்பிற்கு பயந்து சிறையில் இருந்த அனு அனைத்து உண்மைகளையும் அர்ஜூனிடம் போட்டு உடைத்துவிட்டார். இதனால், சிறையில் இருந்து நிரபராதி என்று ரோஜா நிரூபிக்கப்பட்டு விடுதலையானார். ரோஜா உயிருடன் இருப்பதால் அனுவும் கொலைக்குற்றத்தில் இருந்து தப்பித்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், ரோஜாவின் ஆக்ஷன் கிங் அர்ஜூன் அனுவையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஒருபுறம் ரோஜா, மறுபுறம் அனு. அனுவை ஒட்டுமொத்த குடும்பமே வெறுப்புடன் திட்டித்தீர்க்க, அனு எனது கெஸ்ட். இங்குதான் அனு இருப்பாள் என்று அர்ஜூன் தனது பாணியில் கூறுகிறார். இத்தனை நாட்கள் அனு தான் தனது பேத்தி என்று நம்பி ஏமாந்து கொண்டிருந்த அன்னபூரணி அம்மா தனது மிரட்டலான பேச்சாலும், கோபத்தாலும் அனுவை எச்சரிக்கிறார்.
அந்த நேரத்தில், ரோஜா தொடர்பே இல்லாமல் ஒரு லென்த்தி வசனத்தை பேசி அர்ஜூன் சார் சொன்னா ஒரு அர்த்தம் இருக்கும். அனுவை சேத்துக்கோங்கனு ஒரு கண்ணீர் டயலாக் பேசி வீட்டிற்குள் அனைவரையும் அழைத்து சென்றுவிடுவார். சாந்தமூர்த்தி விவகாரத்தில் அனுவை காப்பாற்றுவதற்காகதான் அர்ஜூன் தனது வீட்டிற்கே மீண்டும் அனுவை அழைத்து வந்துள்ளார் என்று ரசிகர்கள் கணித்தாலும், இன்றைய எபிசோடிலே அது காட்டப்பட்டுவிட்டது.
இனிவரும் எபிசோடில் எப்படி அர்ஜூன் தனது புதிய வில்லியை எதிர்கொள்கிறார் என்பதை ரோஜா சீரியல் குழு ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக நகர்த்துகிறதா? அல்லது செண்பகம் – ரோஜா சந்திப்பு போல சவ்வாக இழுக்க உள்ளதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க : Tamil Cinema News: விக்ரமோட அப்பா இவரா? - தமிழ் சினிமாவின் 3 தலைமுறை நடிகர்கள் ஒரு ப்ளாஷ்பேக்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)