Rajinikanth: லியோ படத்தை பார்த்த ரஜினி.. உடனே தயாரிப்பாளருக்கு பறந்த போன்.. என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் நடித்திருக்கும் லியோ படத்தை பார்த்து ரஜினி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்திருக்கும் லியோ படத்தை பார்த்து ரஜினி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.
செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் கடந்த 19ம் தேதி உலகெங்கும் ரிலீசானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீசான லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. லியோ படத்தின் ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.
இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று வரும் லியோ படத்தை பார்த்த திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர் அந்த வகையில் லியோ படத்தை பார்த்த ரஜினி பாராட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லலித்குமார், லியோ படத்தை பார்த்து விட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, ”படம் ரொம்ப நல்லா வந்துருக்கு, புரொடெக்ஷன் வால்யூ சூப்பரா இருக்கு” என பாராடினார் என்றார். ரஜினியே பாராட்டும் அளவுக்கு ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளதாக லலித்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் இல்லாததால், 2 லட்சம் பேர் படத்தை பார்க்க வெளிமாநிலத்திற்கு சென்றதாகவும், அதை தவிர்க்கவே அதிகாலை காட்சிக்கு நீதிமன்றத்தை நாடியதாகவும் லோகேஷ் கூறியுள்ளார். மேலும், தான் நீதிமன்றத்துக்கு போனது விஜய்க்கு தெரியாது என்ற லலித்குமார், செய்தியை பார்த்து விட்டு தனது போன் செய்து நீதிமன்றம் சென்றது குறித்து விஜய் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் கூடியது. அதன்படி லியோ படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை இருப்பால் லியோ படம், ஜெயிலர் கலெக்ஷனை முறியடிக்கும் என கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து விஜய், லோகேஷ் கூட்டணியில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சாண்டி என பலர் நடித்துள்ளனர். வில்லத்தனத்தில் சாண்டி, அர்ஜூன், சஞ்சய் தத் மிரட்டியுள்ளதாக படத்தின் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு போலயே... 5 வைல்டு கார்டு என்ட்ரி: ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!
28 Years Of Kuruthi Punal : 28 ஆண்டுகளை கடந்த கமல்ஹாசனின் குருதிப்புனல்: ஸ்பெஷல் தகவல்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















