மேலும் அறிய

Pushpa 2 Stampede : ”நாங்க உடைஞ்சு போயிட்டோம்” புஷ்பா2-ஆல் உயிரிழந்த பெண்.. கலங்கி பேசிய அல்லு அர்ஜூன்

Allu Arjun : ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்பு காட்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார்.

புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தை அடுத்து நடிகர் அல்லு அர்ஜூன் அப்பெண்ணின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 :

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வியாழனன்று புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, இப்படத்தின்  இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது, இந்த நிலையில் நேற்று முன்தினம்(05.12.2024)வெளியானது, அந்த வகையில் அப்படத்தின்  சிறப்பு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்தது. அப்போது அந்த திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா படக்குழுவினர் வந்துள்ளனர். 

அப்போது அல்லு அர்ஜூனை காண ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது, அப்போது ஏற்ப்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 வயதான ரேவதி என்கிற பெண்மணியும் அவரது 9 வயது மகனும் கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டனர், அதில் ரேவதி பரிதாபமாக உயிரிழந்த அவரது மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: Pragya Nagra : இணையத்தில் கசிந்த படுக்கை அறை வீடியோ... இந்த முறை ஜீவா பட நடிகையா ?

அல்லு அர்ஜூன் இரங்கல்:

தற்போது இச்சம்பவத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனது இரங்கல் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹைதராபாத்தில் உள்ள ஆர்டிசி கிராஸ்ரோடில் புஷ்பாவின் பிரீமியரைப் பார்க்கச் சென்றபோது, ​​அடுத்த நாள் இதுபோன்ற சோகமான செய்தியைக் கேட்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு குடும்பம் காயமடைந்ததாகவும், ரேவதி என்ற பெண் இறந்ததை  கேள்விப்பட்டவுடம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு நேசத்துக்குரிய சடங்கு, ஆனால் இந்த சம்பவம் நம் அனைவரையும் மனவேதனைக்கு உள்ளாக்கியது," 

நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துக்கத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையில் அவர்கள் தனியாக இருக்கவில்லை, குடும்பத்தை நேரில் சந்திப்பார்கள் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். அவர்களின் தேவைக்கு மதிப்பளித்து. துக்கப்படுவதற்கான இடம், இந்த சவாலான பயணத்தில் செல்ல அவர்களுக்கு உதவக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்"

25 லட்சம் நிதியுதவி:

தெலுங்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். உயிரிழிந்த பெண்ணின்   குடும்பத்தின் எதிர்காலத்தைப் கருத்தில் கொண்டு ₹ 25 லட்சம் வழங்குவதாக அவர் கூறினார். துக்கத்தில் இருக்கும் அந்த குடும்பத்திற்கு எந்த உதவிகளையும் செய்ய எங்கள் குழுவினர் தயாராக உள்ளனர் என்றார்.

மேலும் மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று ரசிக்கும் வகையில் திரைப்படங்களைத் தயாரிக்கிறோம் என்று கூறிய அவர், மக்கள் திரைப்பட கொண்டாட்டங்களில்  கவனமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

வழக்குப்பதிவு: 

இதற்கிடையில் இச்சம்பவம் காரணமாக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவினர் மீது  வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் பிரிவுகள் 105, 118(1) (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) r/w 3(5) BNS ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget