Iravin nizhal: தள்ளிப்போகும் “இரவின் நிழல்”.. திட்டத்தை மாற்றும் பார்த்திபன்.. எப்போ ரிலீஸ்.?
பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ ரிலீஸ் தேதி குறித்தான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ ரிலீஸ் தேதி குறித்தான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ‘இரவின் நிழல்’ திரைப்படம் முன்னதாக ஜூன் 24 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதி பல்வேறு காரணங்களால் கை விடப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
அதன் படி இந்தப்படத்தை படக்குழு ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம். வருகிற ஜூலை 1 ஆம் தேதி மாதவனின் “ராக்கெட்ரி”, அருண் விஜயின் “யானை”, அருள்நிதியின் “டி ப்ளாக்” உள்ளிட்ட படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
முன்னதாக, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 'இரவின் நிழல்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய இயக்குநர் பார்த்திபன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல் பற்றி சொல்லுங்கள் என்று கேட்க, ஏ.ஆர்.ரஹ்மானோ ட்ராமால்லாம் வேண்டாம். பாடலை திரையிட்டு விடலாம் என்றார். அப்போது பார்த்திபனின் மைக் வேலை செய்ய வில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் மைக்கை ரோபோ ஷங்கரை நோக்கி வீசினார்.
இதைப்பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து மேடையில் பேசிய பார்த்திபன் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் கொடுத்த கேடயத்தை தூக்கி வந்ததால் கை மிகவும் வலியாக இருந்தது. அந்த நேரத்தில் மைக் வேலை செய்ய வில்லை என்றதும் கோபம் வந்து விட்டது. ஆனால் இது அநாகரிகமான விஷயம்தான் என்னை மன்னித்துவிடுங்கள் என்று பேசினார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















