மேலும் அறிய

Oru Thalai Raagam : 43 வருஷங்கள்.. வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.. ஒரு தலை ராகம் எனும் மெகா ஹிட் 

200 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ்த் திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது இந்தப் பாடலுக்கான ஒரு தலை ராகம் திரைப்படம்

வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது…

எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலில் ஒலித்த இந்த பாட்டுக்கு தியேட்டரில் விசில் பறக்கும். எல்லோர் தலையிலும் கலர்கலராக பேப்பர்கள் தூவப்பட்டிருக்கும். தியேட்டரில் முக்கால்வாசி பேர் கல்லூரி மாணவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். 200 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ்த் திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது இந்தப் பாடலுக்கான ஒரு தலை ராகம் திரைப்படம். 1980 ஆம் ஆண்டு வெளியானது ஒரு தலை ராகம். இயக்கியது டி.ஆர்.ராஜேந்தர். அதுதான் அவரது முதல் படம். ஆனால் அந்தப் படத்தில் அவர் பெயர் இ.என்.இப்ரஹிம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அப்படியென்ன ஸ்பெஷல்..

ஒரு தலை ராகம் படத்தில் அப்படி என்னதான் மக்களை ஈர்த்தது என்று பார்த்தால் யதார்த்தம். யதார்த்த சினிமாக்களுக்கான வெற்றிடம் இருந்த காலகட்டத்தில் தான் இயக்குநர் பாரதிராஜா 16 வயதினேலே என்று காவியத்தைப் படைத்து கிராமத்தை கண்முன் நிறுத்தி மயிலை நம் மனங்களை இன்றுவரை வருட வைத்திருக்கிறார்.

அதேபோல் ஒரு அனுபவத்தைக் கொடுத்தார் டி.ராஜேந்தர். ஒரு தலை ராகம் என்ற பெயர் ஏதோ ஈர்ப்புவிசையை கொடுக்க மக்கள் தியேட்டர்களுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத கதைக்களத்தையும் இசையையும் வசனத்தையும் அழகாக கொடுத்திருந்தார் டி.ராஜேந்தர்.

ஒரு தலை ராகம் கதை என்ன?

மாயவரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படிப்புபடிக்க மாயவரத்தைச் சேர்ந்த இளைஞன் ராஜா சேர்கிறான். கல்லூரிக்கு ரயிலில் செல்லும் ராஜா அதே ரயிலில் அடக்கம்மிக்க சுபத்திராவைக் கண்டு அவள் மீது காதல்கொள்கிறான். சுபத்திராவும் ராஜாவினால் ஈர்க்கப்படுகிறாள் என்றாலும் அவள் அதை தன் குடும்பச்சூழலால் வெளிகாட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள். தன் காதலை சுபத்திராவிடம் ராஜா தெரிவித்தும், அனுக்கு பிடிகொடுக்காமல் சுபத்திரா விலகி செல்கிறாள். தன் காதலுக்கு விடை தெரியாத ராஜா அந்த ஏக்கத்தில் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் உடல் தளர்ச்சி அடைகிறான். கல்லூரியின் கடைசி நாளில் ராஜாவின் நண்பன் மூர்த்தி சுபத்திராவின் மௌனத்தை உடைக்கும் விதமாக பேசுகிறான். இதனால் மனம் தெளிவடையும் சுபத்திரா மறுநாள் ரயிலில் ராஜாவிடம் தன் வந்து தன் காதலை தெரிவிக்கிறாள். பதில் சொல்லாமல் இருக்கும் ராஜாவைத் தொடும்போது அவன் இறந்துவிட்டது தெரிந்து கதறுகிறாள்.

இது இப்போது வேண்டுமானால் வழக்கமான திரைக்கதையாக இருக்கலாம். ஆனால் இன்று இருக்கும் பல்வேறு கல்லூரி கதைக் களங்களுக்கும், காதல் கதைகளுக்கும் அடிப்படை இதுதான். முரளியின் இதயம் படம் கூட இந்த சாயலைக் கொண்டிருக்கும். ஒரு தலை ராகம் காதல் படங்களுக்கு ஒரு கைடு. அந்தச் சாயல் இல்லாமல் இன்றுவரை படம் எடுப்பது கடினமாகத்தான் இருக்கும்.

கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்கும். மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், பேசுவார்கள். அவர்களின் உலகம் இதுதான். நட்பிற்கு எல்லை கிடையாது எனப் பல்வேறு விஷயங்களையும் அச்சு அசலாகக் காட்டிய திரைப்படம் ஒரு தலை ராகம். அதுதான் அப்படத்தின் வெற்றியும் கூட.

1980 மே 2ல் ஒரு தலை ராகம் படம் வெளியானது. நாளை மே 2, 2023 ஆன் ஆண்டுடன் இப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று பார்த்தாலும் ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது.

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget