![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் இப்படித்தான் ஆரம்பிச்சுது.. சூப்பர் ட்விஸ்ட்டை உடைத்த ராகுல் தாத்தா..
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமே நான்தான் என சமீபத்திய போட்டி ஒன்றில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்து புகழ்பெற்ற ராகுல் தாத்தா தெரிவித்துள்ளார்.
![நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் இப்படித்தான் ஆரம்பிச்சுது.. சூப்பர் ட்விஸ்ட்டை உடைத்த ராகுல் தாத்தா.. Nayanthara Vignesh Shivan Love Naanum Rowdy Dhaan fame Rahul Thatha Interview about vicky nayan love நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் இப்படித்தான் ஆரம்பிச்சுது.. சூப்பர் ட்விஸ்ட்டை உடைத்த ராகுல் தாத்தா..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/04/7f957a6028e4ae8f39d671f29f3ada331659623558_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமே நான்தான் என சமீபத்திய போட்டி ஒன்றில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்து புகழ்பெற்ற ராகுல் தாத்தா தெரிவித்துள்ளார்.
இந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து மிகவும் நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்ட நடிகர் ராகுல் தாத்தா கூறியதாவது, நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது தான் நான் அவர்களுக்கு இடையில் காதல் மலரும் தருணத்திற்கு காரண்மாகி விட்டேன். இயக்குநர் விக்னேஷ் சிவனின் நடவடிக்கைகளைக் கவனிக்கும் போது எனக்குள் தோன்றியது, விக்னேஷ் சிவன் நடவடிக்கை நடன இயக்குநர் பிரபு தேவா போல் இருக்கிறதே என தோன்றியது. இது குறித்து நான் நேரடியகவே இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேட்டுவிட்டேன். அதேபோல் நடிகை நயன்தாராவிடமும் தெரிவித்துவிட்டேன். இதன் பிறகுதான் இருவரும் காதல் வயப்பட்டனர். அவர்கள் இருவரும் எப்போதும் இதே காதலோடு நீடூழி வாழ வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் சமீபத்தில் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாது திரையுலக ரசிகர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியனருக்கு வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வலைதளத்தினை ட்ரெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சம் பேருக்கு உணவு
மேலும் திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் ஒரு லட்சம் பேருக்கு உணவளித்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் பயண தூரம், விஐபி பாதுகாப்பு போன்ற காரணங்களால் தேவஸ்தானம் அனுமதி மறுத்ததால் பின் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது இதனிடையே திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். குடும்பத்தோடு அங்கு வந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி சாமி தரிசனம் செய்ததோடு மட்டுமல்லாமல், நண்பகல் 12 மணிக்கு கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டார்.
மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த `லூசிஃபர்’ திரைப்படம் தெலுங்கு மொழியில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் `காட்ஃபாதர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்துள்ளன. இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் நடிகர் ஷாரூக் கானை வைத்து உருவாக்கும் திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
இவை ஒருபக்கம் இருக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)